(எம்.மனோசித்ரா)
பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மீதான வன்முறைத் தாக்குதல்கள் அண்மைக்காலமாக தொடர்ச்சியாக பதிவாகி வருகின்றன. இது குறித்து கடந்த பாராளுமன்ற அமர்வில் மலையக மக்கள் பிரதிநிதிகளால் வலியுறுத்தப்பட்டிருந்த நிலையில், தொழிலாளர்களின் பாதுகாப்பை முழுமையாக உறுதிப்படுத்துவது குறித்து ஆராய்வதற்கான விசேட கலந்துரையாடலொன்று இன்று வியாழக்கிழமை (21) பகல் 2 மணிக்கு பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடைபெறவுள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர் சமந்த வித்தியாரத்ன, 'கடந்த காலங்களில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தொடர்ச்சியாகப் பல்வேறு தாக்குதல் சம்பவங்களுக்கு முகம்கொடுத்து வந்துள்ளனர். வரலாற்றில் அவர்கள் எதிர்கொண்ட இந்த மோசமான சூழல் மற்றும் அவலமான யுகம் தற்போது முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. அண்மையில் பதிவான சம்பவங்கள் தொடர்பில் ஏற்கனவே சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதுடன், பாராளுமன்றத்திலும் இது குறித்து தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
தொழிலாளர்களின் பாதுகாப்பை நூறு வீதம் உறுதிப்படுத்துவதற்காக இன்று நடைபெறும் விசேட உயர் மட்டக் கலந்துரையாடலானது, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் ஆகியோரின் தலைமையில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் பொலிஸ் உயர் அதிகாரிகள், பெருந்தோட்ட நிறுவனங்களின் (கம்பனிகளின்) பிரதிநிதிகள், பெருந்தோட்ட அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM