உலகளவில் கடுமையான மற்றும் சிக்கலான நோய் பாதிப்புகளுக்கு ஆளாகும் நோயாளிகளுக்கு நவீன மருத்துவ தொழில்நுட்பங்களின் உதவியுடன் பல்வேறு மேம்பட்ட சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக, ஒரே நேரத்தில் பல உள்ளுறுப்புகளை மாற்றும் மல்டி-ஆர்கன் டிரான்ஸ்பிளான்ட் அறுவை சிகிச்சை அறிமுகமாகி, அதன் வெற்றி வீதமும் அதிகரித்து வருவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
மருத்துவ மொழியில் “மல்டிவிசரல் மாற்று அறுவை சிகிச்சை” என அழைக்கப்படும் இந்த முறையில், வயிறு, சிறுகுடல், கணையம், கல்லீரல் மற்றும் பெருங்குடல் போன்ற முக்கிய உள்ளுறுப்புகளில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டவை ஒரே நேரத்தில் மாற்றப்படுகின்றன. பொதுவாக கடுமையான குடல் செயலிழப்பு, பல உறுப்பு செயலிழப்பு அல்லது உயிருக்கு ஆபத்தான கட்டிகள் போன்ற சிக்கலான நிலைகளில் இந்த சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது.
அறுவை சிகிச்சையின் போது பாதிக்கப்பட்ட உறுப்புகள் முழுமையாக அகற்றப்பட்டு, மூளைச்சாவு அடைந்தவர்களிடமிருந்து பெறப்பட்ட தான உறுப்புகள் பொருத்தப்படுகின்றன. இதன் மூலம் செரிமான மண்டலத்தின் இயல்பு செயல்பாடு மீண்டும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இத்தகைய சிகிச்சை மிகவும் சிக்கலானது என்பதுடன், பல்வேறு துறை நிபுணர்களின் ஒருங்கிணைந்த பங்களிப்பு அவசியம் எனவும் கூறப்படுகிறது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு உறுப்புகள் சரியாக செயல்படுகிறதா என்பதை உறுதி செய்ய தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பும் தேவைப்படுகிறது.
தற்போது பல உள்ளுறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளின் வெற்றி வீதம் சுமார் 70% முதல் 80% வரை உயர்ந்துள்ளதாக மருத்துவ தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்த வகை சிகிச்சை குடல் செயலிழப்பு, கல்லீரல் நோய், கணைய குறைபாடு மற்றும் புற்றுநோய் போன்ற கடுமையான நிலைகளில் நோயாளிகளுக்கு புதிய வாழ்க்கை நம்பிக்கையை வழங்குவதாக நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
தொகுப்பு: அனுஷா
மருத்துவ ஆலோசனை: மருத்துவர் அன்பழகன்


















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM