திருகோணமலை, மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தக்வா நகர் கடற்கரை பகுதியில், கடலுக்கு சென்று திரும்பிய பின்னர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீனவர்களின் படகுகள் மீது மரம் சாய்ந்து விழுந்ததில் இரண்டு படகுகள் சேதமடைந்துள்ளன.
இந்த சம்பவம் இன்று (20) புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தின் போது படகு ஒன்று கடுமையாக சேதமடைந்ததுடன், மற்றொரு படகு பகுதி அளவில் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போது பருவக் காற்று பலமாக வீசத் தொடங்கியுள்ள நிலையில், கடற்கரைப் பகுதிகளில் உள்ள மரங்கள் ஆபத்தான நிலையில் காணப்படுவதாகவும், இதன் காரணமாகவே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தால் உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இருப்பினும், பாதிக்கப்பட்ட மீனவர்கள் தங்களின் வாழ்வாதார உபகரணங்கள் சேதமடைந்துள்ளதால் கவலை வெளியிட்டுள்ளனர்.

















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM