கொத்மலை தவலந்தென்னையிலிருந்து கம்பளை நோக்கி அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கிளொன்று மோதியதில், வீதியை கடக்க முயன்ற முதியவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் புஸ்ஸல்லாவையில் பதிவாகியுள்ளது.
இந்த விபத்து திங்கட்கிழமை (18) புஸ்ஸல்லாவை நகர மத்திய பகுதியில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
72 வயதுடைய நபர் ஒருவர் கவனக்குறைவாக வீதியை கடக்க முயன்றபோது, நகரம் வழியாக பயணித்த மோட்டார் சைக்கிள் மோதியதில் கடுமையாக காயமடைந்துள்ளார். பின்னர் புஸ்ஸல்லாவை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
விபத்துடன் தொடர்புடைய மோட்டார் சைக்கிள் சாரதி கைது செய்யப்பட்டு கம்பளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். இதனையடுத்து, சந்தேகநபரை இம்மாதம் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புஸ்ஸல்லாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM