இலங்கை மத்திய வங்கி இன்று (20) வெளியிட்டுள்ள புதிய நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 342 ரூபாயைக் கடந்து பாரிய உயர்வை உத்தியோகபூர்வமாகப் பதிவு செய்துள்ளது.
மத்திய வங்கியின் நாணய மாற்று விகிதங்களின்படி, இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை (Buying Rate) 332.08 ரூபாயாகவும், அதன் விற்பனை விலை (Selling Rate) 342.70 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.
ஒரே நாளில் ஏற்பட்ட பாரிய மாற்றம் நேற்று (19) செவ்வாய்க்கிழமை அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 328.23 ரூபாயாகவும், விற்பனை விலை 338.07 ரூபாயாகவும் காணப்பட்டது.
இதற்கமைய, நேற்றைய நாளுடன் ஒப்பிடுகையில் ஒரே நாளில் டொலரின் மதிப்பு மிகக் கடுமையான உயர்வைச் சந்தித்துள்ளது.
இதேவேளை, நாட்டின் அரச வங்கி ஒன்றில் இன்றைய தினம் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூ. 345.20 ஆகவும், கொள்வனவு விலையை ரூ. 335.65 ஆகவும் அதிகரித்துக் காணப்பட்டது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM