கொஸ்கொடவில் இடிந்து விழுந்த மடப்பள்ளியினுள் அடையாளம் தெரியாத நபரின் சடலம் மீட்பு

Published By: Digital Desk 1

17 May, 2026 | 04:23 PM
image

(நமது நிருபர்)

காலி கொஸ்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மகா இந்துருவ பகுதியில் உள்ள இடிந்து விழுந்த பாழடைந்த மடப்பள்ளி ஒன்றிலிருந்து அடையாளம் தெரியாத நபரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கொஸ்கொட மஹா இந்துருவ பகுதியில் நேற்று  (16) சனிக்கிழமை பிற்பகல் உள்ள இடிந்து வீழ்ந்த நிலையில் காணப்படும் கட்டடம் ஒன்றினுள் சடலமொன்று காணப்படுவதாக கொஸ்கொடை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலுக்கமைய பொலிஸார் விசாரணைகள் முன்னெடுத்திருந்தனர். உயிரிழந்தவர் தொடர்பான விபரங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன், அவரது அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

சடலம் மீதான நீதிவான் விசாரணை மற்றும் பிரேத பரிசோதனைகளுக்காக சடலம் பலபிட்டிய ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் கொஸ்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எல்-நினோவால் நாட்டுக்குப் பாரிய பாதிப்புகள் ஏற்படும்...

2026-06-14 15:38:26
news-image

பாரிய கடத்தல் முறியடிப்பு: சொகுசு மோட்டார்...

2026-06-14 14:54:12
news-image

செம்மணி மனிதப்புதைகுழியை பார்வையிடவுள்ள ஐரோப்பிய ஒன்றியப்...

2026-06-14 14:53:38
news-image

மாகாணசபைத் தேர்தல்; சாணக்கியன் எம்.பியின் தனிநபர்...

2026-06-14 14:48:35
news-image

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு...

2026-06-14 15:02:36
news-image

டெங்கு உட்பட வைரஸ் காய்ச்சல் பரவல்...

2026-06-14 14:31:24
news-image

தேசிய கல்விக் கொள்கையின்றி கல்வி மறுசீரமைப்புகளை...

2026-06-14 13:48:36
news-image

எனது கணவர் செம்மணி படுகொலையை வெளிப்படுத்திய...

2026-06-14 12:49:37
news-image

சிறுபான்மை கட்சிகள் கூட்டிணைந்து ஜனாதிபதி அநுரவை...

2026-06-14 12:48:47
news-image

சலே எட்டு நாட்களாக ஒரு துளி...

2026-06-14 12:48:14
news-image

கண்டி - குருநாகல் வீதியில் விபத்து:...

2026-06-14 12:47:40
news-image

2.5 மில்லியன் டொலர் மோசடி பாராளுமன்றுக்கு...

2026-06-14 13:56:41