முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் அனுஷ பெல்பிட்ட ஆகியோருக்கு நீதிமன்றினால் விதிக்கப்பட்டுள்ள நஷ்டஈடு மற்றும் தண்டப்பணம் என்பவற்றைச் செலுத்துவதற்காக பெளத்த தேரர்கள் நேற்று கிரிபத்கொடையில் நிதி திரட்டும்போது அங்கு குழப்ப நிலை ஏற்பட்டது.
“சில் துணி சிறைக் கைதிகளைப் பாதுகாக்கும் நிதியம்” எனும் அமைப்பு லலித் வீரதுங்க மற்றும் அனுஷ பெல்பிட்ட ஆகியோருக்கு நீதிமன்றினால் விதிக்கப்பட்டுள்ள நஷ்டஈடு மற்றும் தண்டப்பணம் என்பவற்றைச் செலுத்துவதற்காக கடந்த வெள்ளிக்கிழமை முதல் நாடு தழுவிய ரீதியில் நிதி திரட்டும் பாத யாத்திரையினை பெளத்த தேரர்கள் முன்னெடுத்துள்ளனர்.
அப்பாத யாத்திரையின் நேற்றைய பயணம் கிரிபத்கொட, ஹுனுப்பிட்டியவிலுள்ள புதிய வீதியில் ஆரம்பமானது. அதன்போது, கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம்வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களான சிசிர ஜயகொடி மற்றும் பிரசன்ன ரணவீர ஆகியோருக்கு மகர நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ள தடையுத்தரவை கிரிபத்கொட பொலிஸார் கையளித்துள்ளனர்.
எனினும் தேரர்கள் தமது பாத யாத்திரையைத் தொடர்ந்துகொண்டிருந்தபோது அங்கு சிலர் தேரர்கள் ஏந்திக்கொண்டு சென்ற பாத்திரத்திற்குள் உணவுப்பொருட்களையும் இட்டனர். அதனைத் தொடர்ந்து தேரர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் தேரர்களுடன் சென்ற தரப்பினருக்கும் பாத்திரத்திற்குள் உணவுப் பண்டங்களையிட்ட தரப்பினர்களுக்குமிடையில் முறுகல் நிலை ஏற்பட்டு கை கலப்பு வரை சென்றது.
எனவே அப்பிரதேசத்தில் சற்று பதற்றம் நிலவியதோடு வாகன நெரிசலும் ஏற்பட்டது. எனினும் பொலிஸார் ஸ்தலத்திற்கு விரைந்து நிலைமையினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM