வனவாசல ரயில் நிலையத்துக்கு அருகில் இன்று சனிக்கிழமை (16) அதிகாலை ரயிலொன்று தடம் புரண்டு கவிழ்ந்ததன் காரணமாக ஏற்பட்ட விபத்து தொடர்பாக ரயில்வே திணைக்களத்தினால் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ரயில்வே திணைக்களத்தின் பாதுகாப்புப் பிரிவு மற்றும் சமிக்ஞைப் பிரிவினரால் இன்று பேலியகொட பொலிஸ் நிலையத்தில் இந்த முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, விபத்துக்குள்ளான ரயிலின் சாரதி மற்றும் கட்டுப்பாட்டாளரிடம் பொலிஸார் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அத்துடன், ரயில் விபத்து இடம்பெற்ற இடத்தில் ரயில் மார்க்கத்தின் ஆணிகள் மற்றும் பாகங்களைக் கழற்றிய நபர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பொலிஸ் அதிகாரிகள் மற்றும் ரயில்வே திணைக்கள அதிகாரிகளினால் விபத்து இடம்பெற்ற இடத்தில் சோதனை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM