எம்மில் பலரும் வாழ்க்கையில் முன்னேறுவதற்கு சோதிடத்தையோ அல்லது ஆன்மீகத்தையோ அதிக அளவில் நம்பிக்கை கொள்ளாதவர்களும் உள்ளனர்.
ஆனாலும் வாழ்க்கையில் ஏதேனும் ஒரு வகையான மாற்றங்கள் ஏற்படாதா? என ஆவலுடன் காத்திருப்பர். சிலர் தங்களது விதியை நினைத்து... இவ்வளவு தான் வாழ்க்கை என தங்களுக்கு இடையில் ஒரு எல்லையை வரையறுத்துக் கொண்டு அதற்குள் வாழ பழகிக் கொண்டிருப்பார்கள்.
இவர்களிடம் மாற்றம் ஏற்பட வேண்டும் என விரும்புகிறீர்களா? என கேட்டால்... “வேண்டும். ஆனால் அது எளிமையான வழிமுறையை கொண்டிருக்க வேண்டும்” என்றுதான் சொல்வர். இவர்களுக்கும் எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் வாழ்க்கையில் அதாவது நாளாந்த இயல்பான வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் ஒரு சூட்சம குறிப்பினை வழங்கி உள்ளனர்.
நீங்கள் நாளாந்தம் காலையில் எழுந்து நீராடும் போது அந்த நீராடலுக்காக பயன்படுத்தும் இறுதி கோப்பை நீரை உங்கள் உடல் அல்லது தலைக்கு ஊற்றும் முன்... உங்கள் வலது கை மோதிர விரலால் “ஓம்” என்ற மந்திரத்தை அந்த கோப்பை நீரில் எழுதி... அந்த நீரினை உங்கள் உச்சந்தலையில் சிறிது சிறிதாக ஊற்றிக் கொள்ளுங்கள்.
உங்கள் உடல் குளிர்ச்சி அடைவதை உணரலாம். இதனைத் தொடர்ந்து உங்கள் வலது கால் கட்டை விரலை தொட்டு வணங்குங்கள். அந்தத் தருணத்தில் “வாழ்க்கையில் விரும்பும் வகையான மாற்றங்கள் ஏற்பட வேண்டும்” என இந்த பிரபஞ்சத்திடம் ஒரு கோரிக்கையை சமர்ப்பியுங்கள். இதனை தொடர்ந்து 48 நாட்கள் செய்து வாருங்கள். உங்கள் வாழ்க்கையில் மாற்றங்கள் நிகழ்வதை அனுபவத்தில் கண்டு மகிழ்ச்சி அடைவீர்கள்.
தொகுப்பு: சுபயோக தாசன்.


















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM