செயற்கை நுண்ணறிவுடன் உரையாடும் போது பயனாளர்களின் தனியுரிமையை உறுதிப்படுத்தும் வகையில், வட்ஸ்அப் மற்றும் மெட்டா செயலியில் “இன்காக்னிட்டோ சாட்” எனும் புதிய அம்சத்தை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
மெட்டா நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்த அம்சம் வட்ஸ்அப்பின் "தனியார் செயலாக்கதொழில்நுட்பத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் பயனர்கள் செயற்கை நுண்ணறிவுடன் மேற்கொள்ளும் உரையாடல்கள் மெட்டா நிறுவனத்திற்கு கூடத் தெரிந்துக்கொள்ளமுடியாத வகையில் பயனர்களின் தனியுரிமையை உறுதிப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது.
இன்காக்னிட்டோ சாட் என்பது ஒரு தற்காலிக உரையாடல் இடம்பெறும் சூழலாகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. உரையாடலின் போது பரிமாற்றிக்கொள்ளப்படும் தகவல்கள் பாதுகாப்பான முறையில் செயலாக்கப்படுவதுடன், அவை சேகரித்துவைக்கப்படாது என்பதையும் உரையாடல் முடிந்ததும் செய்திகள் தானாகவே அழிந்துவிடும் என மெட்டா நிறுவனம் இது தொடர்பில் உறுதியளித்துள்ளது.
மேலும் ஏனைய நிறுவனங்களின் 'இன்காக்னிட்டோ' முறைகளைப் போலன்றி, பயனாளர்கள் கேட்கும் கேள்விகளையோ அல்லது செயற்கை நுண்ணறிவு வழங்கும் பதில்களையோ மெட்டா நிறுவனத்தால் பார்க்க முடியாது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆரோக்கியம் தொடர்பான சந்தேகங்கள், நிதி விவகாரங்கள் மற்றும் தொழில்முறை ஆலோசனைகள் போன்ற உணர்வுப்பூர்வமான மற்றும் தனிப்பட்ட விடயங்களை பகிர விரும்பும் பயனர்களுக்காக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த வசதியுடன், எதிர்வரும் மாதங்களில் “சைட்-செட்” எனும் மற்றுமொரு அம்சத்தையும் அறிமுகப்படுத்த மெட்டா திட்டமிட்டுள்ளது. இது வாட்ஸ்அப்பில் ஒருவருடன் உரையாடிக் கொண்டிருக்கும் போதே, அந்தச் சாட்டைத் தொந்தரவு செய்யாமல் செயற்கை நுண்ணறிவின்உதவியைப் பெற பயனர்களை அனுமதிக்கும் வகையில் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த புதிய இன்காக்னிட்டோ செட் வசதி எதிர்வரும் மாதங்களில் படிப்படியாக அனைத்து வட்ஸ்அப் மற்றும் மெட்டா பயனர்களுக்கும் கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM