(வத்துகாமம் செய்தியாளர்)
மஹியங்கனை பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச்சம்பவம் ஒன்றில் பெண் ஒருவர் படுகாயமடைந்து வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் மஹியங்கனை, அராவத்தை ஹொருபெதிவெவ என்ற இடத்தில் ஞாயிற்றுக்கிழமை (10) இடம்பெற்றுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (10) இரவு குடும்பத் தகராறு காரணமாகக கணவன் தன் மனைவி மீது ஏயார் ரைபிள் ரகத் துப்பாக்கியில் சுட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர் மூன்று பிள்ளைகளின் தாயான 35 வயதுடையவர் என்பதுடன் குறித்த பெண் மஹியங்கனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தையடுத்து சந்தேக நபரான கணவன் தப்பி ஓடியுள்ளார். துப்பாக்கிச் சூட்டிற்குப் பயன்படுத்தப்பட்ட ஏயார் ரைபிள் துப்பாக்கியையும், அதற்காகப் பயன்படுத்தப்படும் 77 தோட்டாக்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
தலைமறைவாகியுள்ள சந்தேக நபரைத் தேடி மஹியங்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM