இன்றைய திகதியில் திருமணமான பெண்கள் குழந்தைகள் பெற்றுக் கொள்வதில் போதிய அவகாசத்துடன் திட்டமிடுகிறார்கள். இருப்பினும் சிலருக்கு குழந்தைகள் மீது ஆசை இருந்தாலும் அன்பு செலுத்தக்கூடிய விருப்பம் இருந்தாலும் அந்த கருத்தரிக்கும் கால கட்டத்தை நினைத்து மனதளவில் மிகுந்த அச்சமடைவார்கள்.
இதனை மருத்துவ மொழியில் டோகோஃபோபியா என குறிப்பிடப்படுகிறது. இத்தகைய பெண்களுக்கு மகப்பேறு வைத்திய நிபுணர்கள் மற்றும் உளவியல் சிகிச்சை நிபுணர்கள் போதுமான அளவில் கலந்தாலோசனை மற்றும் பிரத்யேக சிகிச்சையை அளித்து நிவாரணம் வழங்குவார்கள் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
திருமணமான பெண்களின் சிலர் கருத்தரித்தவுடன் குற்ற உணர்வுடன் இருப்பர். வெட்கப்படுவர். தனிமையை உணர்வர். கட்டுப்பாட்டை இழந்தது போன்றோ அல்லது சிக்கிக் கொண்டது போன்றோ உணர்வர். கர்ப்பமாக இருப்பதை மற்றவர்களிடம் மகிழ்ச்சியாக வெளிப்படுத்த மாட்டார்கள்.
பிரசவத்தை தவிர்ப்பதற்காக கருவை கலைப்பதற்கான முயற்சிகளிலும் அது தொடர்பான சிந்தனையிலும் தீவிரமாக ஈடுபட்டிருப்பர். யாரேனும் கருத்தரித்தல் பற்றி பேசினாலும் உடனடியாக அங்கிருந்து சென்று விடுவர். இத்தகைய அறிகுறிகள் இருந்தால் அவர்கள் பிரசவம் குறித்த உளவியல் பாதிப்பிற்கு ஆளாகி இருக்கிறார்கள் என அவதானிக்கலாம்.
பல்வேறு காரணங்களால் திருமணம் ஆகாத பெண்களுக்கும் இத்தகைய டோகோஃபோபியா எனும் உளவியல் பாதிப்பு ஏற்படக்கூடும். சிலருக்கு முதல் பிரசவம் மிக சிக்கலானதாகவும் கடினமானதாகவும் இருந்தாலும் அவர்கள் மீண்டும் கருத்தரித்திருக்கும் நிலையில் இத்தகைய உளவியல் பாதிப்பிற்கு ஆளாகுவார்கள்.
இது தொடர்பாக கருத்தரித்திருக்கும் பெண்கள் மகப்பேறு மருத்துவ நிபுணர்கள் மற்றும் உளவியல் சிகிச்சை நிபுணர்களிடம் விரிவாக தங்களது உணர்வுகளை பகிர்ந்து கொள்ள வேண்டும். இவர்களில் சிலருக்கு EDMR எனும் கண் அசைவு உணர்வு நீக்க மறு செயலாக்கம் எனும் சிகிச்சை வழங்கப்படலாம்.
இதன் மூலம் நினைவுத்திறன் மேம்படுத்தப்பட்டு மிகு உணர்ச்சிகளை கட்டுப்படுத்தும் பயிற்சியை பெறுவர். வேறு சிலருக்கு இது தொடர்பான கலந்தாலோசனை - கலந்துரையாடல் மற்றும் சில பிரத்யேக உளவியல் நடத்தை மேம்பாட்டு சிகிச்சை வழங்கி இதிலிருந்து நிவாரணம் தருவர்.
வைத்தியர் ஸ்ரீ தேவி
தொகுப்பு அனுஷா.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM