(இணையத்தள சர்வதேச செய்திப் பிரிவு)
தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று திங்கட்கிழமை (11) முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சென்று சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.
சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது வீட்டுக்கு சென்று முன்னாள் முதல்வரை விஜய் சந்தித்துள்ளார்.
தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்ற பின், த.வெ.க தலைவர் விஜய், மரியாதை நிமித்தம் மூத்த அரசியல் தலைவர்கள் பலரை சந்திக்க திட்டமிட்டிருந்த நிலையில், இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இன்றைய தினம் சட்டமன்றத்தில் உறுப்பினராக பதவியேற்றுக்கொண்ட விஜய், கூட்ட நிறைவுக்குப் பின்னரே, முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.
இந்த சந்திப்பின்போது விஜய், ஸ்டாலின் இருவரும் ஒருவருக்கொருவர் சால்வை அணிவித்து, மரியாதையை வெளிப்படுத்திக்கொண்டனர். அந்த சந்திப்பு வேளையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினும் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.























கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM