தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தமிழக ஆளுநர் அர்லேகரை சந்தித்து, ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளார்.
இன்று (9) விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் த.வெ.க தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்பதற்கான தமது ஆதரவுக் கடிதத்தை வழங்கின.
இதனையடுத்து, ஆளுநரை சந்தித்து, ஆட்சி அமைப்பதற்கான உரிமையினை விஜய் கோரியதாக தெரிவிக்கப்படுகிறது.
பெரும்பான்மை ஆதரவை நிரூபித்து, தமிழ்நாட்டில் த.வெ.க ஆட்சி அமைக்க உரிமை கோருவதற்காக ஆளுநரை சந்திக்க சென்ற விஜய், ஆளுநரை சந்திக்காமல் இடைநடுவிலேயே தனது கட்சி அலுவலகத்துக்கு திரும்பினார்.
அர்லேகர் கேரள மாநிலத்துக்கும் ஆளுநர் என்பதால், அங்கு சில பணிகளை மேற்கொள்வதற்காக இன்று மாலை கேரளாவுக்கு செல்லவிருந்தார். இதனால் விஜய் ஆளுநரை சந்திப்பதில் சில தடைகள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
அதன் பின்னர, ஆளுநரின் கேரள பயணம் இரத்து செய்யப்பட்டதாகவும் ஆளுநரை சந்திக்க மீண்டும் விஜய்க்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.
அந்த அழைப்பின் பேரில் விஜய் மீண்டும் ஆளுநர் மாளிகைக்கு சென்று சந்தித்துள்ளார்.
அங்கு விஜய், 120 பெரும்பான்மை பலத்தை, ஆதரவுக் கடிதங்களை காண்பித்து நிரூபித்து, தமிழ்நாட்டில் த.வெ.க ஆட்சி அமைப்பதற்கான உரிமையை கோரியதாகவும் இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM