லாப் எரிவாயுவைப் பயன்படுத்தும் உணவகங்களில் உணவு மற்றும் பானங்களின் விலைகளை இன்று (07) வியாழக்கிழமை நள்ளிரவு முதல் அதிகரிப்பதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. எரிவாயு விலை அதிகரிப்பு மற்றும் அதிகரித்து வரும் ஏனைய செலவுகளுக்கு மத்தியில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகச் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் தெரிவித்துள்ளார்.
தற்போது லாப் எரிவாயுவைப் பயன்படுத்தும் சுமார் 25% முதல் 30% வரையான உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகள் பாரிய நஷ்டத்தைச் சந்தித்து வருவதாகவும், விலைத் திருத்தம் தவிர்க்க முடியாதது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் பின்வரும் விலை மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன,
சோறு, பிரியாணி மற்றும் நாசி கோரெங்: ரூ. 25 அதிகரிப்பு.
பால் தேநீர் ; ரூ. 10 அதிகரிப்பு
சாதாரண தேநீர் ; ரூ. 5 அதிகரிப்பு
சிற்றுண்டிகள் : ரூ. 5 அதிகரிப்பு
விலை உயர்வு அறிவிக்கப்பட்ட போதிலும், முட்டை ரொட்டி மற்றும் பராட்டா ஆகிய உணவுகளின் விலைகளில் தற்போதைக்கு எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை என ஹர்ஷன ருக்ஷான் மேலும் தெரிவித்துள்ளார்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM