தோல் புற்றுநோய் பாதிப்புகள் அதிகரிப்பு; சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை

Published By: Digital Desk 3

07 May, 2026 | 11:19 AM
image

தோல் புற்றுநோய் பாதிப்புகள் அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதிகப்படியான சூரிய ஒளியில் இருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் வைத்திய ஆலோசகர் புற்றுநோய் நிபுணர் வைத்தியர் ஹசந்தி ஜெயலத் தெரிவித்துள்ளதாவது, 

ஆண்டுதோறும் சுமார் 35,000 வழக்குகள் பதிவாகின்றன. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 15,000 உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

சூரிய ஒளியால் ஏற்படும் பாதிப்புகளை குறைப்பதற்காக குறைந்தபட்சம் SPF 30 பாதுகாப்பு கொண்ட சூரியக்கதிர் பாதுகாப்புக் கிரீமை பயன்படுத்த வேண்டும். காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நேரடி சூரிய ஒளியைத் தவிர்க்க வேண்டும்.

வெளியில் செல்லும் போது தொப்பி உள்ளிட்ட பாதுகாப்பு ஆடைகளை அணிவதுடன், தொடர்ந்து சூரியக்கதிர் பாதுகாப்புக் கிரீமை பயன்படுத்த வேண்டும்.

தோல் புற்றுநோய்களில் பேசல் செல் கார்சினோமா, ஸ்குவாமஸ் செல் கார்சினோமா மற்றும் மெலனோமா ஆகியவை அதிகமாகக் காணப்படுகின்றன. அவற்றில் மெலனோமா ஆரம்பத்திலேயே கண்டறியப்படாவிட்டால் வேகமாகப் பரவி உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியதாகக் கருதப்படுகிறது.

மேலும், சில சரும வெண்மைப்படுத்தும் கிரீம்களில் ஹைட்ரோகுயினோன், பாதரசம் மற்றும் ஸ்டீராய்ட்கள் போன்ற தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் இருக்கக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இவ்வகை இரசாயனங்கள் சருமத்தின் இயற்கை பாதுகாப்பை பலவீனப்படுத்தி புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், குறிப்பாக அதிக சூரிய ஒளி காணப்படும் பகுதிகளில், தோல் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க பொதுமக்கள் மத்தியில் விரிவான அறிவூட்டல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

"இலங்கை மற்றும் பாகிஸ்தான் இடையிலான இளைஞர்...

2026-05-11 19:16:34
news-image

அமரகீர்த்தி அத்துகோரல கொலை வழக்கு :...

2026-05-11 18:59:17
news-image

21வது ஆசிய ஊடக மாநாட்டில் பங்கேற்பதற்காக...

2026-05-11 18:05:33
news-image

கண்டி விக்டோரியா நீர்த்தேக்கத்தில் நீர்மட்டம் குறைவு

2026-05-11 17:42:16
news-image

கொழும்பு டேம் வீதி பொலிஸ் நிலையத்துக்கு...

2026-05-11 17:56:52
news-image

நாட்டின் நிதிப் பரிமாற்றம், தரவுகளின் பாதுகாப்பை...

2026-05-11 17:37:22
news-image

கடும் மழையால் பண்டாரவளை நகரம் வெள்ளத்தில்...

2026-05-11 16:47:11
news-image

யாழில் முள்ளிவாய்க்கால் நினைவு வாரம்

2026-05-11 16:34:04
news-image

தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதியிலுள்ள வீதியை...

2026-05-11 16:25:45
news-image

உருமாற்றம் செய்யப்பட்ட வாகனங்களுக்குத் தடை: பொலிஸார்...

2026-05-11 16:19:16
news-image

விசாரணைக்கு அழைக்கும் எந்த நேரத்திலும் சமூகமளிக்கத்...

2026-05-11 16:01:35
news-image

வாடகை வீடுகள் மூலம் நிதி மோசடிகள்:...

2026-05-11 16:18:22