2026இல் இதுவரையான காலப்பகுதியில் 34 இலட்சத்திற்கும் அதிகமானோர் சோதனை: குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 2,163 பேர் கைது!

Published By: Digital Desk 1

07 May, 2026 | 10:41 AM
image

(செ.சுபதர்ஷனி)

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட சோதனை நடவடிக்கைகளுக்கமைய  34 இலட்சம் பேர் இதுவரை சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளதுடன், இதன்போது பல்வேறு குற்றச் செயல்களுடன்  தொடர்புடையவர்கள் என அடையாளம் காணப்பட்ட  2,163 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக உதவி பொலிஸ் அத்தியட்சகர் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எப்.யு.வூட்லர் தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று புதன்கிழமை (06) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்காகவும் விசேட சுற்றிவளைப்புகள் மற்றும் கைது நடவடிக்கைகள் என்பன தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

ஜனாதிபதியின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட 'முழு நாடுமே ஒன்றாக' எனும் தேசிய வேலைத்திட்டத்தின் இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் சுமார் 01 இலட்சத்து 87 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதற்கமைய கைதான சந்தேகநபர்களில் 315 பேருக்கு எதிராகக் குற்றவரும்படித் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

2,740பேர் தடுப்புக்காவலில் வைத்து விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என அடையாளம் காணப்பட்ட 2,022 பேரைப் புனர்வாழ்வு மத்திய நிலையங்களுக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த சுற்றிவளைப்புகளின் போது பொலிஸாரால் 1,935 கிலோகிராம் ஹெரோயின், 5,435 கிலோகிராம் கஞ்சா, 1,989 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள், 271 கிலோகிராம் கொக்கைன், 430 கிலோகிராம் குஷ்ரக போதைப்பொருள் மற்றும் சுமார் 15 இலட்சம் போதை மாத்திரைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும் நாட்டில் முன்னெடுக்கப்படும் விசேட சோதனை நடவடிக்கைகளுக்கமைய 34 இலட்சம் பேர் இதுவரை சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளனர். இந்தச் சோதனைகளின் போது பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் என அடையாளம் காணப்பட்ட 2,163 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

அத்துடன், பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 31,039 பேரும், திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 19,006 பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதன்போது, கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களில் நீதிமன்ற நடவடிக்கைகளின் பின்னர் 1,088 கிலோகிராம் ஹெரோயின், 355 கிலோகிராம் கொக்கைன், 659 கிலோகிராம் ஐஸ் மற்றும் 15 இலட்சம் போதை மாத்திரைகள் என்பன அழிக்கப்பட்டுள்ளன. மேலும் கடந்த 2024, 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் வெளிநாட்டில் தங்கியிருந்த 33 பேர் சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் கைதுசெய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

அவர்களில் 16 பேருக்கு எதிராக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. எனினும், குறித்த நபர்களும் அந்நாட்டு பாதுகாப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு இராஜதந்திர முறையில் நாடுகடத்தப்பட்டுள்ளனர். மேலும் தற்போது வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ள 94 பேருக்கு எதிராக சர்வதேச பொலிஸாரால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அம்பலாந்தோட்டையில் ஒருவர் வெட்டிக் கொலை ;...

2026-05-12 14:07:29
news-image

முள்ளிவாய்க்காலில் படுகொலையானவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி...

2026-05-12 14:10:27
news-image

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நினைவு ஊர்தி...

2026-05-12 13:40:55
news-image

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார்...

2026-05-12 13:26:51
news-image

பெலாரஸுக்கு புறப்படுகிறார் அமைச்சர் விஜித்த ஹேரத்

2026-05-12 13:28:09
news-image

கடும் மழையினால் மட்டு. மண்டூர் -...

2026-05-12 13:23:34
news-image

யாழில் காணி விடுவிப்பு தொடர்பில் ஆளுநர்...

2026-05-12 13:08:37
news-image

யாழ்.போதனாவில் அரச பகுப்பாய்வு திணைக்கள அதிகாரிகள்...

2026-05-12 12:52:31
news-image

மஹியங்கனையில் துப்பாக்கிச் சூடு – பெண்...

2026-05-12 12:48:27
news-image

நாடளாவிய ரீதியில்  42 டெங்கு அபாய...

2026-05-12 12:11:53
news-image

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலஞ்ச...

2026-05-12 11:17:59
news-image

கணினி குற்றங்களுடன் தொடர்புடைய 198 வெளிநாட்டவர்கள்...

2026-05-12 09:13:47