போர்நிறுத்த உடன்பாட்டை மீறி லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்

Published By: Digital Desk 3

07 May, 2026 | 10:37 AM
image

இஸ்ரேல் மற்றும் ஹெஸ்புல்லா அமைப்பிற்கு இடையே கடந்த மாதம் போர்நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டதைத் தொடர்ந்து, முதன்முறையாக லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் தெற்குப் புறநகர்ப் பகுதியில் இஸ்ரேல் புதன்கிழமை (06) வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.

ஹெஸ்ஸ்புல்லா அமைப்பின் அதிமுக்கியப் பிரிவான 'ரத்வான்' படையின் தளபதி ஒருவரைக் குறிவைத்தே இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் ஆகியோர் இணைந்து வெளியிட்ட கூட்டு அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தாக்குதலில் அத்தளபதி கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள போதிலும், இஸ்ரேலிய இராணுவமோ அல்லது ஹெஸ்புல்லா அமைப்போ இதனை இன்னும் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையேயான மோதல்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமைதிப் பேச்சுவார்த்தைகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள சூழலில், பெய்ரூட் மீது இஸ்ரேல் நடத்தியுள்ள இந்தத் தாக்குதல் ஒட்டுமொத்த போர்நிறுத்த ஒப்பந்தத்தையும் முறிக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.

லெபனானின் தெற்குப் பகுதியில் உள்ள லிடானி ஆற்றிற்கு தெற்கே இஸ்ரேலியப் படைகள் இன்னும் நிலைநிறுத்தப்பட்டுள்ளதுடன், அங்குக் கடுமையான தாக்குதல்களும் தொடர்கின்றன. இதற்குப் பதிலடியாக ஹிஸ்புல்லா அமைப்பும் இஸ்ரேலிய இராணுவ நிலைகளைக் குறிவைத்து ஏவுகணை மற்றும் ஆயுதமேந்திய ட்ரோன் தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது.

வொஷிங்டனில் இரு நாட்டுத் தூதரக அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் தொடர்கின்றன. எனினும், உயர்மட்டத் தலைவர்களின் சந்திப்பு குறித்துப் பேசுவது தற்போதைக்கு முன்கூட்டிய ஒன்றாகும் என லெபனான் பிரதமர் நவாப் சலாம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து லெபனான் பிரதமர் சலாம், 

"நாங்கள் இஸ்ரேலுடன் உறவைச் சீராக்க விரும்பவில்லை, மாறாக அமைதியையே விரும்புகிறோம். எங்கள் எல்லையிலிருந்து இஸ்ரேலியப் படைகள் வெளியேறுவதற்கான கால அட்டவணையை வழங்குவதே எங்களது குறைந்தபட்ச கோரிக்கையாகும்." எனத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மற்றும் லெபனான் ஜனாதிபதி ஜோசப் அவூன் ஆகியோரை நேரில் சந்தித்துப் பேச அழைப்பு விடுத்துள்ள போதிலும், முறையான பாதுகாப்பு உடன்பாடும் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களும் நிறுத்தப்பட்ட பின்னரே அது சாத்தியம் என லெபனான் தரப்பு தெரிவித்துள்ளது.

லெபனானின் தெற்குப் பகுதியான செலயாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் இரண்டு பெண்கள் உட்பட நால்வர் கொல்லப்பட்டுள்ளதாக லெபனான் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் 2-ஆம் திகதி போர் ஆரம்பமானதில்  இருந்து லெபனானில் 2,700-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு தெரிவித்த...

2026-05-12 16:25:06
news-image

தமிழ்நாட்டில் 717 மதுபானசாலைகளை மூடுவதற்கு முதலமைச்சர்...

2026-05-12 15:14:30
news-image

ஈரானுடன் போர் நிறுத்தம் ஆபத்தில் உள்ளது...

2026-05-12 06:38:51
news-image

“காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு” -...

2026-05-11 17:25:57
news-image

பிளவுபட்ட அதிமுக..!?

2026-05-11 17:11:53
news-image

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார்...

2026-05-11 16:52:52
news-image

அமெரிக்காவின் சமாதானத் திட்டத்தை நிராகரித்தது ஈரான்:...

2026-05-11 15:44:04
news-image

ஹண்டா வைரஸ் : கப்பலில் இருந்து...

2026-05-11 15:24:16
news-image

தமிழ்நாட்டு முதலமைச்சர் விஜய்க்கு மிக உயர்ந்த...

2026-05-11 13:25:32
news-image

தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ரா...

2026-05-11 13:33:40
news-image

சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்ற எதிர்க்கட்சித் தலைவர்...

2026-05-11 12:08:45
news-image

காத்மண்டு விமான நிலையத்தில் டர்கிஷ் ஏர்லைன்ஸ்...

2026-05-11 11:18:11