நிதி மோசடியில் ஈடுபட்ட 74 வெளிநாட்டவர்கள் கைது!

Published By: Digital Desk 1

07 May, 2026 | 07:41 AM
image

( இணையத்தள செய்திப் பிரிவு )

விசா நிபந்தனைகளை மீறி இலங்கையில் தங்கியிருந்து, சட்டவிரோதமான முறையில் நிதி மோசடிகளில் ஈடுபட்டு வந்த வெளிநாட்டுப் பிரஜைகள் 74 பேர் கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று புதன்கிழமை (06) மாலை, கொள்ளுப்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உத்தராநந்த மாவத்தை பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் பொலிஸ் குழுவினரால் விசேட சுற்றிவளைப்பு ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது, செல்லுபடியாகும் விசா இன்றி தங்கியிருந்ததோடு, இணையம் ஊடாக நிதி மோசடிகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 41 ஆண்களும் 33 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் வியட்நாம் நாட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 19 முதல் 39 வயதிற்கு இடைப்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொள்ளுப்பிட்டி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.    

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அம்பலாந்தோட்டையில் ஒருவர் வெட்டிக் கொலை ;...

2026-05-12 14:07:29
news-image

முள்ளிவாய்க்காலில் படுகொலையானவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி...

2026-05-12 14:10:27
news-image

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நினைவு ஊர்தி...

2026-05-12 13:40:55
news-image

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார்...

2026-05-12 13:26:51
news-image

பெலாரஸுக்கு புறப்படுகிறார் அமைச்சர் விஜித்த ஹேரத்

2026-05-12 13:28:09
news-image

கடும் மழையினால் மட்டு. மண்டூர் -...

2026-05-12 13:23:34
news-image

யாழில் காணி விடுவிப்பு தொடர்பில் ஆளுநர்...

2026-05-12 13:08:37
news-image

யாழ்.போதனாவில் அரச பகுப்பாய்வு திணைக்கள அதிகாரிகள்...

2026-05-12 12:52:31
news-image

மஹியங்கனையில் துப்பாக்கிச் சூடு – பெண்...

2026-05-12 12:48:27
news-image

நாடளாவிய ரீதியில்  42 டெங்கு அபாய...

2026-05-12 12:11:53
news-image

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலஞ்ச...

2026-05-12 11:17:59
news-image

கணினி குற்றங்களுடன் தொடர்புடைய 198 வெளிநாட்டவர்கள்...

2026-05-12 09:13:47