எம்மில் சிலர் இதயத்தில் உள்ள ரத்த நாள பகுதியில் கொழுப்பு படிவுகள் படிந்திருப்பதால்.. ரத்தநாள அடைப்பு பாதிப்பு ஏற்பட்டிருக்கும். இவர்களுக்கு வைத்திய நிபுணர்கள் ஸ்டென்ட் எனும் மெல்லிய உலோகத்தாலான கட்டமைப்பை இதய ரத்த நாளப்பகுதியில் பொருத்தி.. குருதி ஓட்டத்தை சீராக்கி இருப்பர். இதற்குப் பிறகு பெரும்பாலான நோயாளிகள் மீண்டும் தங்களுக்கு இத்தகைய பாதிப்பு ஏற்படாது என நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். ஆனால் வைத்தியர்கள் அறிவுறுத்திய வாழ்க்கை நடைமுறைகளை முழுமையாக பின்பற்ற தவறினால்.. இத்தகைய உலோக கட்டமைப்பு பொருத்தப்பட்ட இடத்தில் மீண்டும் பாதிப்பு ஏற்படக்கூடும் என வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.
பொதுவாக இதயத்தில் உள்ள ரத்த நாளங்களில் அடைப்பு இருந்தால்.. அவர்களுக்கு ஸ்டென்ட் ஓஞ்சியோபிளாஸ்ரி எனும் சத்திர சிகிச்சையை மேற்கொண்டு நிவாரணத்தை வழங்கி இருப்பார்கள். இத்தகைய நிவாரண சத்திர சிகிச்சை இதயத்தில் குறிப்பிட்ட ரத்த நாள அடைப்பை நீக்குவதற்கான சிகிச்சை மட்டும்தான். இதற்குப் பிறகு வைத்தியர்கள் பரிந்துரைத்த வாழ்க்கை நடைமுறையை முழுமையாக கடைப்பிடிக்காவிட்டால்... மீண்டும் இத்தகைய பாதிப்பு ஏற்படக்கூடும். அதாவது சத்திர சிகிச்சை மூலம் விரிவாக்கம் செய்யப்பட்ட இதய ரத்த நாளப்பகுதி மீண்டும் குறுகி விடுவதால் தான் இத்தகைய பாதிப்பு ஏற்படுகிறது.
அதிலும் குறிப்பாக இரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தாதவர்கள்.. குருதி அழுத்த பாதிப்பை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளாதவர்கள்... கொலஸ்ட்ரால் கட்டுப்பாட்டில் இல்லாதவர்கள்.. தொடர்ந்து புகை பிடித்ததில் ஈடுபடுபவர்கள்... வைத்தியர்கள் பரிந்துரைத்த மருந்தியல் சிகிச்சையை தொடர்ந்து மேற்கொள்ளாமல்.. புறக்கணித்தவர்கள் ஆகியோர்களுக்கு இத்தகைய பாதிப்பு மீண்டும் ஏற்படக்கூடும். இதனை மருத்துவ மொழியில் ரீஸ்டினோசிஸ் என குறிப்பிடுகிறார்கள். சிலருக்கு இதய ரத்த நாள அடைப்பை சீராக்குவதற்காக பொருத்தப்பட்ட உலோக கட்டமைப்புக்குள் இத்தகைய பாதிப்பு ஏற்படக்கூடும். இதன் காரணமாக வைத்தியர்கள் அறிவுறுத்தும் வாழ்க்கை நடைமுறையை முழுமையாக பின்பற்ற வேண்டும். மீண்டும் இத்தகைய பாதிப்பு ஏற்பட்டால்.. அவர்களுக்கு மீண்டும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ரத்த நாள அடைப்பு தொடர்பான சத்திர சிகிச்சையை மேற்கொண்டு நிவாரணம் வழங்குவர்.
வைத்தியர் ஸ்ரீ குமார் தொகுப்பு அனுஷா.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM