மேற்காசிய பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போர்ப் பதற்றம் நீடித்து வரும் சூழலில், ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி இன்று (06) புதன்கிழமை சீனத் தலைநகர் பீஜிங்கை சென்றடைந்துள்ளார்.
அங்கு அவர் சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ உடன் இருதரப்பு உறவுகள் மற்றும் தற்போதைய சர்வதேசப் பாதுகாப்பு நிலவரங்கள் குறித்து முக்கியப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகளுக்கு எதிராகச் சர்வதேச ஆதரவைத் திரட்டும் நோக்கில், ஈரான் வெளிவிவகார அமைச்சர் கடந்த சில வாரங்களாகப் பல்வேறு நாடுகளுக்கு இராஜதந்திரப் பயணங்களை மேற்கொண்டு வருகிறார்.
ஈரானின் மிக நெருங்கிய நட்பு நாடாகவும், அந்நாட்டின் மசகு எண்ணெய்யை அதிகளவில் வாங்கும் முக்கிய நாடாகவும் சீனா விளங்குவதால், இந்தப் பயணம் சர்வதேச அளவில் உற்றுநோக்கப்படுகிறது.
இப்பயணத்தைக் கூர்ந்து கவனித்து வரும் அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் மார்கோ ரூபியோ சீனாவுக்கு விடுத்துள்ள கோரிக்கையில்,
ஈரானின் தற்போதைய நடவடிக்கைகள் அந்நாட்டை உலக அரங்கில் தனிமைப்படுத்தி வருகின்றன என்பதை ஈரான் வெளியுறவு அமைச்சருக்குச் சீனா தெளிவுபடுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அடுத்த வாரம் சீனாவுக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு, சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை நேரில் சந்தித்துப் பேச்சுவார்ததை நடத்தவுள்ளார்.
இந்த இரு பெரும் தலைவர்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்புக்கு ஒரு வாரமே உள்ள நிலையில், அதற்கு முன்னதாகவே ஈரான் அமைச்சர் சீனாவுக்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்துவது மத்திய கிழக்கு அரசியல் நகர்வுகளில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM