ஒன்பது பாடல்களை கொண்ட ‘நவமணி மாலை’ எனும் தமிழ் இசைவட்டை சிங்கப்பூரின் கலாமஞ்சரி நிறுவனமானது ஒளிவட்டு இணையத்தில் மே 13ஆம் திகதி வெளியிடவிருக்கிறது.
இந்த பாடல்களை சென்னையைச் சார்ந்த ருக்மணி சிவக்குமார் எழுதி, இசையமைத்திருக்கிறார்.
கலாமஞ்சரியின் நிறுவனரும் உள்ளூர் பாடகியுமான சௌந்தரநாயகி வயிரவன் ஒன்பது பாடல்களையும் பாடியிருக்கிறார். இந்த ஒளிவட்டு அவருடைய ஏழாவது வெளியீடாகும்.
ஜி. சிவகுமார் மற்றும் மாணிக்கவாசகம் மிருதங்கம் வாசித்துள்ளனர். வே. சிவக்குமார் வயலின் இசைத்துள்ளார்.

விஷுவல் பீட்ஸ் பிரைவேட் லிமிடட் (Visual Beatz Pte Ltd) இதை ஒலிப்பதிவு செய்துள்ளனர்.
நட்சத்திரம் பிரேம்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
“முக்கண்ணன் மகனே” என விநாயகரைப் போற்றும் பாடல், “நமசிவாய” என்ற சிவன் பாடல், “ஆதிபராசக்தி” (மீனாட்சி, காமாட்சி, விசாலாட்சி) என்கிற மூன்று தேவியர் மீதான பாடல், சரவணப் பொய்கையின் முருகன் பாடல், அறுபடை வீடுகளின் பெருமை, பஞ்ச சபையின் அற்புதத்தை விளக்கும் நடராஜர் பாடல், ரவிக்குல சோமா என்ற ராமர் பாடல், காளிங்கன் நர்த்தனம் ஆடிய கண்ணன் பாடல், நவகிரகங்களின் மகிமையை விளக்கும் நரசிம்மர் பாடல் என பல இந்து கடவுள்கள் குறித்து இந்த ஒளிவட்டு வெளிவருகிறது.
இப்பாடல் காட்சிகள் செயற்கை நுண்ணறிவைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM