(மா.உஷாநந்தினி)
அகில இலங்கை கம்பன் கழகம் நடத்தும் கம்பன் விழா 2026 இன் மூன்றாவது நாளின் காலை நேர நிகழ்வு மே மாதம் 2ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் காலை 9.30 மணிக்கு நடைபெற்றது.
இதன்போது கொழும்பு மாநகரசபை உறுப்பினர் பழ.புஸ்பநாதன் தம்பதியர் மங்கல விளக்கேற்றி நிகழ்வை ஆரம்பித்து வைக்க கடவுள் வாழ்த்தினை செல்வி வைஷாலி ஆறுமுகம் பாடினார். அதனையடுத்து மதுவப்பன் முத்தையா (தமிழ்நாடு) தலைமை உரை ஆற்றினார். தொழிலதிபர் ஏ.பி.ஜெயராசா தொடக்க உரை ஆற்றினார்.
அதனைத் தொடர்ந்து மாணவர் அரங்கத்தில் கொழும்பு சைவ மங்கையர் வித்தியாலய மாணவி லக்ஷ்மிதா "நீலமாலை" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
அதன் பின்னர் பேச்சாளர் பாரதி பாஸ்கரை (தமிழ்நாடு) நடுவராகக் கொண்ட "சுழலும் சொற்போர்" நடைபெற்றது. "முரண் பாத்திரங்களுள் முதன்மை பாத்திரம்" "கைகேயியே" என சி.கேசவனும், "வாலியே" என அ. வாசுதேவாவும், "இலக்குவனே" என கு. பாலஷண்முகனும், "சுக்கிரீவனே" என ந. விஜயசுந்தரமும், "விபீடணனே" என பரா. ரமேஷும் வாதாடினர்.
















( படங்கள் - ஜே.சுஜீவகுமார் )















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM