எம்மில் சிலருக்கு அவர்களுடைய சிறுநீரகங்களின் செயல்பாட்டில் ஏற்படும் விவரிக்க இயலாத தடையின் காரணமாக சிறுநீரக செயல் இழப்பு அல்லது நாட்பட்ட சிறுநீரக பாதிப்பு ஏற்படக்கூடும். இவர்களுக்கு வைத்தியர்கள் முதன்மையான நிவாரண சிகிச்சையாக டயாலிசிஸ் சிகிச்சையை பரிந்துரைத்திருப்பார்கள். அதிலும் குறிப்பாக ஹீமோ டயாலிசிஸ் சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி இருப்பார்கள்.
இவர்களுக்கு இத்தகைய சிகிச்சை வெற்றிகரமாக பலன் அளிப்பதற்கு ஒர்டெரியோவென்ஸ் ஃபிஸ்துலா எனும் சத்திர சிகிச்சை செய்து கொள்ளவும் வலியுறுத்தி இருப்பார்கள். ஏனெனில் குருதி சுத்திகரிப்பிற்கு ஒர்டெரியோவென்ஸ் ஃபிஸ்துலா எனும் சிறிய அளவிலான சத்திர சிகிச்சை டயாலிசிஸ் செய்து கொள்ளும் நோயாளிகளுக்கு முழுமையான நிவாரணம் கிடைக்கும் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
பொதுவாக எம்முடைய உடல்களின் ஆரோக்கியமான ரத்தம் பாய்வதற்கு பாய்வதற்கு தமனி எனும் ரத்த நாளங்களும், அசுத்தமான ரத்தம் செல்வதற்கு சிரை அல்லது நரம்பு எனும் ரத்த நாளங்களும் உள்ளன. இந்த இரண்டு ரத்த நாளங்களும் எம்முடைய உடலில் அளவில் வேறுபட்டாலும் இணையாகவே அமையப் பெற்றிருக்கின்றன. நாட்பட்ட சிறுநீரக பாதிப்பு உள்ளவர்களுக்கு டயாலிசிஸ் எனும் சிகிச்சை தான் நிவாரணம் எனும் நிலை ஏற்படும் போது.. அவர்களுக்கு வைத்தியர்கள் ஒர்டெரியோவென்ஸ் ஃபிஸ்துலா எனும் சத்திர சிகிச்சையை மேற்கொள்கிறார்கள்.
இந்த சிகிச்சையின் போதும் எம்முடைய உடலில் உள்ள தமனி மற்றும் சிரை ஆகிய இரண்டுக்கும் இடையே சத்திர சிகிச்சை மூலம் ஒரு பிரத்யேக இணைப்பு உருவாக்கப்படும். இதன் காரணமாக சிரை எனும் நரம்பு பகுதியில் குருதி ஓட்டம் மேம்பட்டு டயாலிசிஸ் சிகிச்சை எளிதாகிறது. இத்தகைய சிகிச்சை பெரும்பாலும் கை அல்லது மணிக்கட்டு பகுதிகள் மேற்கொள்ளப்படுகிறது. இத்தகைய சத்திர சிகிச்சையை மேற்கொண்டு மூன்று மாதங்களுக்குப் பிறகு ஹீமோடயாலிசிஸ் எனப்படும் நிவாரண சிகிச்சைக்கான முழுமையான பலன்களை நோயாளிகள் பெறுகிறார்கள். ஆனால் இத்தகைய சத்திர சிகிச்சையை மேற்கொண்ட பிறகு வைத்தியர்கள் அறிவுறுத்தும் வாழ்க்கை நடைமுறையை உறுதியாக நோயாளிகள் பின்பற்ற வேண்டும்.
இதனிடையே எம்முடைய ஆசனவாய் பகுதியில் ஏற்படும் ஃபிஸ்துலா எனும் பாதிப்பு இத்தகைய ஒர்டெரியோவென்ஸ் ஃபிஸ்துலா எனும் பாதிப்பிலிருந்து முற்றிலும் வேறுபட்டது என்பதும், இரண்டும் ஒன்றல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது.
வைத்தியர் யோகேஷ்
தொகுப்பு அனுஷா.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM