(மா.உஷாநந்தினி)
அகில இலங்கை கம்பன் கழகம் நடத்தும் 'கம்பன் விழா – 2026’இன் இரண்டாம் நாள் மாலை நேர நிகழ்வுகள் கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் மே மாதம் 1ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணியளவில் நடைபெற்றது.
இதன்போது தொழிலதிபர் ஆர்.மகேஸ்வரனும் அவரது துணைவியாரும் இணைந்து மங்கல விளக்கேற்றி நிகழ்வினை ஆரம்பித்துவைத்தனர். ரி.கருணாகரனின் கடவுள் வாழ்த்தைத் தொடர்ந்து, டில்லி கம்பன் கழகத் தலைவர் கே.வி.கே. பெருமாள் தொடக்கவுரை ஆற்றினார்.
கவிஞர் த.ஜெயசீலன் ‘கம்பன் காட்டும் ஒளி’ என்ற தலைப்பில் கவிப்பொழிவு நிகழ்த்தினார்.
இந்த ஆண்டு கம்பன் கழகம் நடத்திய கவிதை, பேச்சு, திருக்குறள் மனனப் போட்டி, இஸ்லாமிய இலக்கிய பேச்சுப்போட்டி ஆகிய போட்டிகளில் பங்குபற்றிய மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டன.
தொடர்ந்து, எஸ். ராஜா (தமிழ்நாடு) தலைமையில் 'சான்றோரால் சகிக்க முடியாத பெருங் குற்றம்’ என்ற தலைப்பில் பட்டிமண்டபம் நடைபெற்றது.
'சான்றோரால் சகிக்க முடியாத பெருங் குற்றம் கைகேயி செய்ததே’ என தி.திருநந்தகுமார் (அவுஸ்திரேலியா), தாமல் கோ.சரவணனும் (தமிழ்நாடு), 'சான்றோரால் சகிக்க முடியாத பெருங் குற்றம் வாலி செய்ததே’ என 'மரபின் மைந்தன்’ முத்தையா (தமிழ்நாடு), க.குமாரதாசனும் (அவுஸ்திரேலியா) 'சான்றோரால் சகிக்க முடியாத பெருங் குற்றம் இராவணன் செய்ததே’ என பாரதி பாஸ்கர் (தமிழ்நாடு) மற்றும் ந.விஜயசுந்தரம் ஆகியோரும் வாதிட்டனர்.பதினொரு பேர் அடங்கிய நோக்கர் குழுவினர் முன்னிலையில் நடைபெற்ற பட்டிமண்டப வாதங்களின் நிறைவில், 'சான்றோரால் சகிக்க முடியாத பெருங் குற்றம் கைகேயி செய்ததே’ என்ற அணி நோக்கர் குழுவால் நீக்கப்பட்டது.
அதன் பின், நடுவரான எஸ். ராஜா ஏனைய இரு அணிகளின் வாதங்களை ஆராய்ந்து, 'சான்றோரால் சகிக்க முடியாத பெருங் குற்றம் இராவணன் செய்ததே’ எனத் தீர்ப்பளித்ததோடு இரண்டாம் நாள் நிகழ்வுகள் நிறைவடைந்தன.































கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM