எதிர்வரும் உலக அன்னையர் தினத்தை முன்னிட்டு, "சமூக வலைத்தளங்கள் ஊடாக அன்னையர் எதிர்நோக்கும் சவால்களும் தீர்வுகளும்" என்ற தலைப்பிலான விசேட கலந்துரையாடல் நிகழ்ச்சி எதிர்வரும் மே 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பு காக்கைதீவில் நடைபெறவுள்ளது.
கொழும்பு காக்கைதீவு இந்து மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வு, அன்றைய தினம் காலை 8.30 மணிக்கு காக்கைதீவு கடற்கரை வளாகத்தில் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாகக் கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் தலைவியும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான திருமதி சுகந்தி இராஜகுலேந்திரா மற்றும் சைபர் பாதுகாப்பு நிபுணர் ஆரணி சீனிவாசன் ரெஷாங்கன் ஆகியோர் கலந்துகொண்டு கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவுள்ளனர். கொழும்பு விவாகப் பதிவாளர் திருமதி ரேனகா பாலசுரேஸ் இந்நிகழ்வை நெறிப்படுத்தவுள்ளார்.
இன்றைய டிஜிட்டல் உலகில் அன்னையர் எதிர்கொள்ளும் சைபர் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல், சமூக வலைத்தளங்களை எவ்வாறு பொறுப்புடன் கையாளுவது மற்றும் டிஜிட்டல் தளங்களில் எழும் சவால்களுக்குச் சாத்தியமான தீர்வுகளைக் கண்டறிதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இக்கலந்துரையாடல் முன்னெடுக்கப்படவுள்ளது.
அனைவரையும் அன்புடன் அழைக்கும் ஏற்பாட்டாளர்கள், மேலதிக விபரங்களுக்கு +94714777788 என்ற தொலைபேசி இலக்கத்தைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM