அகில இலங்கை கம்பன் கழகம் நடத்தும் கம்பன் விழா 2026 நிகழ்வு ஏப்ரல் 30ஆம் திகதி வியாழக்கிழமை மாலை கொழும்பு வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் ஆரம்பமானது.
விழாவின் முதல் அங்கமாக, கம்பன் திருவுருவப்படமும் இராமர் திருவுருவச் சிலையும், மண்டபத்துக்கு அருகாமையில் உள்ள ஸ்ரீ ஐஸ்வர்ய லக்ஷ்மி திருக்கோவிலிலிருந்து ஊர்வலமாக மண்டபத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு, மண்டப மேடையில் நிறுத்தப்பட்டு தீபாராதனை வழிபாடு நடைபெற்றது.
அகில இலங்கை இந்து மாமன்றத்தின் தலைவி அபிராமி கைலாசபிள்ளை மங்கல விளக்கேற்றி நிகழ்வைத் தொடக்கிவைக்க, 'இசைவேந்தன்" மு.தயாபரன் கடவுள் வாழ்த்துப் பாடினார்.
கொழும்பு கம்பன் கழகத்தின் பெருந்தலைவரும் முன்னாள் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதியுமான ஜெ. விஸ்வநாதன் தலைமையுரை ஆற்றினார்.
கொழும்பு கம்பன் கழகத் தலைவர் ஈ.கணேஷ் தெய்வநாயகம் தொடக்கவுரையும், மலேசிய முன்னாள் அமைச்சர் 'டத்தோஸ்ரீ' எம்.சரவணன் எழிலுரைக்கான ஒரு தொடக்க உரையையும் வழங்கினர்.
அதன் பின்னர் தமிழ்நாட்டிலிருந்து வருகைதந்த முனைவர் பாரதி கிருஷ்ணகுமார் “தாரணிக் கொடையாளன் கம்பன்” என்ற தலைப்பில் எழிலுரை ஆற்றினார்.
இந்த நிகழ்வில் கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் எழுதிய “இராம காதை” வசன நடை, முதலாம் பகுதி நூல் வெளியீடு நடைபெற்றது.
நூலின் முதல் பிரதியை தமிழ்நாட்டின் கோவிலூர் மடாலய நாராயண ஞானதேசிக சுவாமிகளிடமிருந்து இலக்கியப் புரவலர் அல்ஹாஜ் ஹாசிம் உமர் பெற்றுக்கொண்டார்.
அடுத்து, ஐந்து ஆளுமைகளுக்கு அறக்கட்டளை விருதுகள் வழங்கப்பட்டன. பேராதனை பல்கலைக்கழகத்தின் வாழ்நாள் பேராசிரியர் வ. மகேஸ்வரன், மிருதங்க வித்துவான் வை. வேனிலான், யாழ் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடாதிபதி பேராசிரியர் நா. பிரதீபராஜா, மூத்த கவிஞர் நாக. சிவசிதம்பரம், ஊடகவியலாளர் நிசாம்தீன் ஹஷாம் முஹம்மத் ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டது.
அதனையடுத்து நாட்டிய அரங்கில் ஆறு கம்பராமாயண காண்டங்களை எடுத்துக்காட்டும் வகையிலான நடனங்கள் நிகழ்த்தப்பட்டதோடு நடன ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
- மா. உஷாநந்தினி





















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM