"கம்பன் விழா - 2026" கொழும்பில் ஆரம்பம்

01 May, 2026 | 01:24 AM
image

அகில இலங்கை கம்பன் கழகம் நடத்தும் கம்பன் விழா 2026 நிகழ்வு ஏப்ரல் 30ஆம் திகதி வியாழக்கிழமை மாலை கொழும்பு வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் ஆரம்பமானது. 

விழாவின் முதல் அங்கமாக, கம்பன் திருவுருவப்படமும் இராமர் திருவுருவச் சிலையும், மண்டபத்துக்கு அருகாமையில் உள்ள ஸ்ரீ ஐஸ்வர்ய லக்ஷ்மி திருக்கோவிலிலிருந்து ஊர்வலமாக மண்டபத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு, மண்டப மேடையில் நிறுத்தப்பட்டு தீபாராதனை வழிபாடு நடைபெற்றது.

அகில இலங்கை இந்து மாமன்றத்தின் தலைவி அபிராமி கைலாசபிள்ளை மங்கல விளக்கேற்றி நிகழ்வைத் தொடக்கிவைக்க, 'இசைவேந்தன்" மு.தயாபரன் கடவுள் வாழ்த்துப் பாடினார்.

கொழும்பு கம்பன் கழகத்தின் பெருந்தலைவரும் முன்னாள் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதியுமான  ஜெ. விஸ்வநாதன் தலைமையுரை ஆற்றினார்.

கொழும்பு கம்பன் கழகத் தலைவர்  ஈ.கணேஷ் தெய்வநாயகம் தொடக்கவுரையும், மலேசிய முன்னாள் அமைச்சர் 'டத்தோஸ்ரீ' எம்.சரவணன் எழிலுரைக்கான ஒரு தொடக்க உரையையும் வழங்கினர்.

அதன் பின்னர் தமிழ்நாட்டிலிருந்து வருகைதந்த முனைவர் பாரதி கிருஷ்ணகுமார் “தாரணிக் கொடையாளன் கம்பன்” என்ற தலைப்பில் எழிலுரை ஆற்றினார். 

இந்த நிகழ்வில் கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் எழுதிய “இராம காதை” வசன நடை, முதலாம் பகுதி நூல் வெளியீடு நடைபெற்றது.

நூலின் முதல் பிரதியை தமிழ்நாட்டின் கோவிலூர் மடாலய நாராயண ஞானதேசிக சுவாமிகளிடமிருந்து இலக்கியப் புரவலர் அல்ஹாஜ் ஹாசிம் உமர் பெற்றுக்கொண்டார். 

அடுத்து, ஐந்து ஆளுமைகளுக்கு அறக்கட்டளை விருதுகள் வழங்கப்பட்டன. பேராதனை பல்கலைக்கழகத்தின் வாழ்நாள் பேராசிரியர் வ. மகேஸ்வரன், மிருதங்க வித்துவான் வை. வேனிலான், யாழ் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடாதிபதி பேராசிரியர் நா.  பிரதீபராஜா, மூத்த கவிஞர் நாக. சிவசிதம்பரம், ஊடகவியலாளர் நிசாம்தீன் ஹஷாம் முஹம்மத் ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டது.

அதனையடுத்து நாட்டிய அரங்கில் ஆறு கம்பராமாயண காண்டங்களை எடுத்துக்காட்டும் வகையிலான நடனங்கள் நிகழ்த்தப்பட்டதோடு நடன ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

- மா. உஷாநந்தினி

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்க்கரை நோய்க்கு அப்பால்: Diabetasol தயாரிப்பின்...

2026-05-11 09:32:54
news-image

சாஹிரா கல்லூரியின் 90வது ஆண்டு விழா

2026-05-10 16:40:01
news-image

அன்னையர் தினத்தில் படைப்பாக்க முயற்சி ;...

2026-05-10 09:27:29
news-image

திருமலை இ.மதன் எமுதிய தாய்ப்பசு சிறுகதை...

2026-05-10 09:26:58
news-image

வத்துகாமம்  ஶ்ரீ முத்துமாரி அம்பாளுக்கு வைகாசி...

2026-05-10 08:56:34
news-image

"வரலாற்றின் குரல்" நூல் வெளியீடு

2026-05-09 20:29:02
news-image

அட்டனில் நான்கு மாணவிகளின் பரதநாட்டிய அரங்கேற்றம்...

2026-05-09 21:04:33
news-image

பெண்களின் நீதிக்கான தேடல் கண்காட்சி திருகோணமலையில்.!

2026-05-08 15:25:59
news-image

மண்முனைப் பற்றில் நடைபெற்ற ''கவிதைகளோடு பேசுவோம்''...

2026-05-08 14:37:50
news-image

ஸ்ரீ பேச்சி அம்மன் கும்பாபிஷேகம்: கொழும்பில்...

2026-05-07 17:32:56
news-image

வெள்ளவத்தையில் "தமிழர் பண்பாடும் பனைவளமும் 2026"...

2026-05-06 17:10:28
news-image

சுவிசில் சிறப்பாக நினைவுகூரப்பட்ட மாமனிதர் தேனிசை...

2026-05-05 10:03:02