நுவரெலியா ஆவேலியா ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த சித்திரா பௌர்ணமி முத்தேர்த் திருவிழாவை முன்னிட்டு பால்குட பவனி இன்று வியாழக்கிழமை (30) காலை 9 மணியளவில் நுவரெலியா லேடி மெக்கலம் டிரைவ் நீர்வீழ்ச்சியின் அருகில் விசேட பூஜை வழிபாடுகளுடன் ஆரம்பமானது.
இந்த ஊர்வலமானது நுவரெலியா லேடி மெக்கலம் டிரைவ் வீதி ஊடாக ஆரம்பித்து உடபுஸ்ஸல்லாவ வீதி நுவரெலியா வைத்தியசாலை வீதி ஆவெலியா நவகம்கொட கிராம வீதி மற்றும் கோயில் வீதி வழியாக ஆலயத்தை வந்தடைந்தது.
தொடர்ந்து ஆலயத்தில் 1008 நவோத்திர சகஸ்வர சத சங்காபிஷேகம் நடைபெற்று மகேஸ்வர பூஜை வழிபாடுகளுடன் அடியார்களுக்கு அன்னதானமும் வழங்கி வைக்கப்பட்டது.
நாளை வெள்ளிக்கிழமை (01) காலை முத்தேர்த் திருவிழா திருவிளக்கு பூஜையுடன் ஆரம்பமாகவுள்ளது.
இந்த நிகழ்வுகள் அனைத்தும் ஆலய பரிபாலன சபை தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் உள்ளிட்ட நிர்வாக சபை உறுப்பினர்களின் எற்பாட்டில் நடைபெறுகிறது.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM