இந்திய துணை ஜனாதிபதியின் ஒற்றுமைக்கான அழைப்பு

26 Apr, 2026 | 10:45 AM
image

தமிழ்த்தேசிய கட்­சி­க­ளி­டையே ஒற்­றுமை மிகவும் அவ­சி­ய­மா­னது என்று இலங்கை வந்­தி­ருந்த இந்­தி­யாவின் துணை ஜனா­தி­பதி சி.பி.இரா­தா­கி­ருஷ்ணன் வலி­யு­றுத்­தி­யி­ருக்­கின்றார்.

கடந்த 19ஆம் திகதி இலங்­கைக்கு விஜயம் செய்­தி­ருந்த இந்­திய துணை ஜனா­தி­பதி, அன்­றைய தினம் தமிழ்த் தேசிய கட்­சி­களின் தலை­வர்­களை சந்­தித்து கலந்­து­ரை­யா­டி­யி­ருந்தார். இந்த சந்­திப்பில் இலங்கைத் தமி­ழ­ரசுக் கட்­சியின் சார்பில் அதன் தலைவர் சி.வி.கே. சிவ­ஞானம், பொதுச் செய­லாளர் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி எம்.ஏ. சுமந்­திரன், யாழ். மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எஸ்.சிறி­தரன், மட்­டக்­க­ளப்பு மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இரா­ச­மா­ணிக்கம் சாணக்­கியன் ஆகி­யோரும் ஜன­நா­யக தமிழ்த் தேசியக் கூட்­ட­ணியின் சார்பில் புளொட் அமைப்பின் தலைவர் தர்­ம­லிங்கம் சித்­தார்த்தன், ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்­க­ல­நாதன், தமிழ்த் தேசிய பேர­வையின் சார்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்­ன­ணியின் பொதுச் செய­லாளர் செல்­வ­ராசா கஜேந்­திரன் ஆகியோர் பங்­கேற்­றி­ருந்­தனர்.

இந்த சந்­திப்­பை­ய­டுத்து, இலங்கைத் தமி­ழ­ரசுக் கட்­சியின் தலைவர் சி.வி.கே.சிவ­ஞானம் மற்றும் தமி­ழ­ரசுக் கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எஸ்.சிறி­தரன் ஆகி­யோரின் கைகளைப் பற்­றிய இந்­திய துணை ஜனா­தி­பதி, இலங்­கையில் தமிழ்க் கட்­சி­களின் எண்­ணிக்கை அதி­க­ரித்து விட்­டன. தமிழ்க் கட்­சி­களின் தலை­வர்­க­ளி­டையே ஒற்­றுமை மிகவும் அவ­சியம் என்று எடுத்துக் கூறி­யி­ருக்­கின்றார். அவர் இவ்­வாறு ஒற்­று­மையின் அவ­சி­யத்தை வலி­யு­றுத்­திய போது, இரு தலை­வர்­களும் சிரித்­த­வாறு நின்­றி­ருக்­கின்­றனர்.

இந்­திய துணை ஜனா­தி­பதி சி.பி.இரா­தா­கி­ருஷ்ணன், தமி­ழகம் திருப்­பூரைச் சேர்ந்­த­வ­ராவார். அவர் பாரதிய ஜனதாக் கட்­சியின் சார்பில் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக இரு தட­வைகள் தெரி­வா­னவர். இத­னை­விட மூன்று வரு­டங்கள் வரையில் தமி­ழ­கத்தின் பாரதிய ஜனதாக் கட்சி மாநிலத் தலை­வ­ரா­கவும் பணி­யாற்­றி­யவர்.

ஈழத் தமிழர் விவ­கா­ரத்தை நன்கு அறிந்­தவர். அதில் பரிச்­ச­ய­மா­னவர்.   இலங்­கையில், குறிப்­பாக வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியக் கட்­சி­க­ளி­டையே பிள­வுகள், பிணக்­குகள் ஏற்­பட்­டுள்­ளமை பெரும் பாதிப்பை ஏற்­ப­டு­கின்­றது என்ற விட­யத்தை நன்கு அறிந்­த­மை­யி­னா­லேயே தமி­ழ­ரசுக் கட்­சியின் இரு தலை­வர்­களின் கைகளைப் பற்றி ஒற்­று­மையின் அவ­சி­யத்தை வலி­யு­றுத்­தி­யி­ருக்­கின்றார்.

ஏற்­க­னவே இலங்­கைக்கு விஜயம் செய்­தி­ருந்த இந்­திய வெளி­வி­வ­கார அமைச்சர் எஸ்.ஜெய்­சங்கர், தமிழ்க்கட்­சி­களின் தலை­வர்கள் மத்­தியில் ஒற்­றுமை நிலவ வேண்­டி­யதன் அவ­சி­யத்தை வலி­யு­றுத்­தி­யி­ருந்தார்.

கடந்த வரு­டமும் அதற்கு முன்­னைய தட­வையும் இலங்­கைக்கு அவர் விஜயம் செய்­த­போது, தமிழ்த் தேசியக் கட்­சி­களின் தலை­வர்­களை சந்­தித்து கலந்­து­ரை­யா­டி­யி­ருந்தார். இதன்­போது இந்த ஒற்­று­மையின் அவ­சி­யத்தை அவர் எடுத்துக் கூறி­யி­ருக்­கின்றார்.

தற்­போது மீண்டும் இந்­தி­யாவின் துணை ஜனா­தி­ப­தி­யான சி.பி. இரா­தா­கி­ருஷ்ணன், இந்த விட­யத்தை எடுத்துக் கூறி­யி­ருக்­கின்றார்.

உண்­மை­யி­லேயே வடக்கு, கிழக்கைச் சேர்ந்த தமிழ்த் தேசியக் கட்­சி­களின் தலை­வர்கள் மத்­தியில் ஒற்­றுமை நில­வு­வ­தற்கு பதி­லாக வேற்­று­மையே நிலவி வரு­கின்­றது.

தமிழ்த் தேசியக் கட்­சி­க­ளுக்கு மத்­தி­யி­லேயே போட்­டியும் பொறா­மையும் நீடித்து வரு­கின்­றது. தமி­ழீழ விடு­தலைப் புலிகள் பலம்­பெற்­றி­ருந்த காலப் பகு­தியில் 2001ஆம் ஆண்டு தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு உரு­வாக்­கப்­பட்­டது. தமிழர் விடு­தலைக் கூட்­டணி, ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ்., அகில இலங்கை தமிழ் காங்­கிரஸ் ஆகிய நான்கு கட்­சி­களை உள்­ள­டக்கி இந்தக் கூட்­ட­மைப்பு உரு­வாக்­கப்­பட்­டது.

பிள­வு­பட்­டி­ருந்த தமிழ்த் தேசியக் கட்­சிகள் இவ்­வாறு ஒன்­றி­ணைக்­கப்­பட்டு கூட்­ட­மைப்­பாக பரி­ண­மித்­த­தை­ய­டுத்து, தமிழ் மக்­களின் பெரும்­பான்­மை­யான ஆத­ரவு அந்தக் கூட்­ட­மைப்­புக்கு கிடைத்­தி­ருந்­தது. 2001ஆம் ஆண்டு, 2004ஆம் ஆண்டு உட்­பட நடை­பெற்ற பாரா­ளு­மன்ற தேர்­தல்­களின் போது பெரும்­பான்­மை­யான உறுப்­பி­னர்­களை இந்தக் கூட்­ட­மைப்பு வடக்கு, கிழக்­கி­லி­ருந்து பெற்­றி­ருந்­தது.

2009ஆம் ஆண்டு யுத்தம் முடி­வுக்கு கொண்­டு ­வ­ரப்­பட்­ட­தை­ய­டுத்து, தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பு பிள­வு­களை சந்­திக்க ஆரம்­பித்­தது. கஜேந்­திரகுமார் பொன்­னம்­பலம் தலை­மை­யி­லான அகில இலங்கை தமிழ்க்காங்­கிரஸ்  கூட்­ட­மைப்­பி­லி­ருந்து வில­கி­யது. அதன் பின்னர் சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் தலை­மை­யி­லான ஈ.பி.ஆர்.எல்.எவ். அதி­லி­ருந்து வில­கி­யது. இந்த நிலையில் தர்­ம­லிங்கம் சித்­தார்த்தன் தலை­மை­யி­லான புளொட் அமைப்பு கூட்­ட­மைப்பில் இணைந்­திருந்தது.

2022ஆம் ஆண்­ட­ளவில் உள்­ளூ­ராட்சி தேர்தல் அறி­விப்­பை­ய­டுத்து தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பாக இருந்த தமி­ழ­ரசுக் கட்சி, ரெலோ, புளொட் ஆகி­ய­வற்­றி­லி­ருந்து தமி­ழ­ரசுக் கட்­சியைத் தவிர ஏனைய இரு கட்­சி­களும் வில­கி­யி­ருந்­தன. உள்­ளூ­ராட்சித் தேர்­தலில் தமி­ழ­ரசுக் கட்சி தனித்து போட்­டி­யிட வேண்டும் என்று தீர்­மா­னித்­த­தை­ய­டுத்தே ஏனைய இரு கட்­சி­களும் கூட்­ட­மைப்­பி­லி­ருந்து வெளி­யேறி புதிய கூட்­ட­ணியை அமைத்­தன.

அத­ன­டிப்­ப­டை­யி­லேயே தற்­போது ஜன­நா­யக தமிழ்த் தேசியக் கூட்­டணி உரு­வாக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. இதில் ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ்., சமத்­துவக் கட்சி, ஜன­நா­யகப்போரா­ளிகள் கட்சி என்­பன உள்­ள­டங்­கி­யுள்­ளன. இலங்கைத் தமி­ழ­ரசுக் கட்சி தனித்து செயற்­பட்டு வரு­கின்­றது.

கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­பலம் தலை­மையில் கட்­சிகள் ஒன்­றி­ணைந்து தமிழ் தேசியப் பேரவை எனும் அமைப்பை உரு­வாக்­கி­யுள்­ளன. தற்­போது தமிழ்த் தேசியக் கட்­சி­களின் பிர­தானக் கட்­சிகள் மூன்று பிர­தான பிரி­வு­க­ளாகப் பிரிந்து செயற்­பட்டு வரு­கின்­றன.

இலங்கைத் தமி­ழ­ரசுக் கட்­சிக்குள் தலை­வர்­க­ளி­டையே முரண்­பாடும் பிளவு நிலையும் நீடித்து வரு­கின்­றது. தமி­ழ­ரசுக் கட்­சியின் தலை­மைத்­து­வத்தை தெரிவு செய்யும் விட­யத்தில் ஏற்­பட்ட இழு­பறி நிலைமை இன்று கட்­சியை நீதி­மன்­றத்­துக்கு கொண்டு சென்­றி­ருக்­கி­றது.

தமி­ழ­ரசுக் கட்­சியின் செய­லாளர் சுமந்­திரன் அணி­யினர் ஒரு தரப்­பா­கவும், பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எஸ்.சிறி­தரன் தலை­மை­யி­லான தரப்­பினர் மற்­றொரு குழு­வா­கவும் செயற்­பட்டு வரு­கின்­றனர். இரு தரப்­புக்கும் இடை­யி­லான போட்­டா­ போட்டி நிலைமை கட்­சியின் முன்­னேற்­றத்­துக்கு தடை­யாக இருந்து வரு­கின்­றது.

இரு தரப்­பி­ன­ரையும் இணக்­கப்­பாட்­டுக்கு கொண்டு வரு­வ­தற்கு மேற்­கொள்­ளப்­பட்ட முயற்­சிகள் தோல்­வியைத் தழு­வி­யி­ருக்­கின்­றன. இவ்­வா­றான ஒரு நிலை­யில்தான் இந்­திய துணை ஜனா­தி­பதி சி.பி.இரா­தா­கி­ருஷ்ணன் தமி­ழ­ரசுக் கட்­சியின் தலைவர் சி.வி.கே.சிவ­ஞானம் மற்றும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எஸ்.சிறி­தரன் ஆகி­யோ­ரது கரங்­களைப் பிடித்து ஒற்­று­மைப்­பட வேண்­டி­யதன் அவ­சி­யத்தை வலி­யு­றுத்­தி­யி­ருக்­கின்றார்.

தற்­போ­தைய நிலையில் மூன்று பிர­தான பிரி­வு­க­ளாக செயற்­படும் தமிழ்த் தேசியக் கட்­சிகள், இனப்­பி­ரச்­சி­னைக்­கான அர­சியல் தீர்வு விட­யத்­தி­லா­வது ஒன்­றி­ணைந்து தமிழ் மக்­களின் அபி­லா­ஷை­களை பூர்த்தி செய்யக் கூடிய தீர்­வொன்றை தயா­ரிப்­ப­தற்கு முன்­வர வேண்டும் என்று வலி­யு­றுத்­தப்­பட்டு வரு­கின்­றது.

இதற்­கான முயற்­சியில் இலங்­கை­யி­லுள்ள சுவிட்­சர்­லாந்து தூத­ரகமும் ஈடு­பட்­டி­ருந்­தது. பெப்­ர­வரி மாதம் 19ஆம் திகதி தமிழ்த் தேசியக் கட்­சி­களின் தலை­வர்­களை தூத­ர­கத்தில் சந்­திக்க வைப்­ப­தற்கு முயற்சி மேற்­கொள்­ளப்­பட்­டது. ஆனால், அந்த முயற்சி கைகூ­டி­யி­ருக்­க­வில்லை.

அதன் பின்னர் அர­சியல் தீர்வு விட­யத்தில் பொது­வான இணக்­கப்­பாட்டை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு தமிழ் சட்­டத்­த­ர­ணிகள் பேரவை நட­வ­டிக்கை எடுத்­தி­ருந்­தது.

பெப்­ர­வரி மாதம் 02ஆம் திகதி சட்­டத்­த­ர­ணிகள் பேர­வையால் முத­லா­வது கூட்டம் நடத்­தப்­பட்­டது. இந்தக் கூட்­டத்தில் கலந்­து­கொண்ட இலங்கைத் தமி­ழ­ரசுக் கட்சி, தமிழ்த் தேசிய பேரவை, ஜன­நா­யக தமிழ்த் தேசிய கூட்­டணி ஆகி­ய­வற்றின் தலை­வர்கள் மத்­தியில் அர­சியல் தீர்வு விட­யத்தில் ஓர் இணக்­கப்­பாட்டை எட்­டு­வ­தற்­கான தீர்­மானம் எடுக்­கப்­பட்­டது.

இம்­மாதம் 09ஆம் திகதி இரண்­டா­வது கூட்டம் நடத்­தப்­பட்­டது. அதிலும் அர­சியல் தீர்வு குறித்து ஆராய்­வ­தற்கு 06 பேர் கொண்ட நிபுணர் குழுவை நிய­மிப்­ப­தற்கும் அதில் கட்சிகளின் பிரதிநிதிகளை உள்ளடக்குவதற்கும் இணக்கம் காணப்பட்டது.

ஆனால், தமிழ்த் தேசிய பேரவையினால் கடந்த பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி நடத்தப்பட்ட கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுக்கமைய அரசியலமைப்பை குறித்து ஆராய 28 பேரடங்கிய குழுவொன்று தற்போது நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

இந்த அறிவிப்புக்கு தமிழரசுக்கட்சி எதிர்ப்பு வெளி யிட்டிருக்கின்றது. அதனால் தமிழ் சட்டத்தரணிகள் பேரவையினது முயற்சி தோல்வியடையும் நிலைமை உருவாகியிருக்கின்றது.

இவ்வாறு தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் மத்தியில் முரண்பாடுகள் நீடித்து வருகின்றமை தமிழ் மக்களின் எதிர்காலத்துக்கு நல்லதல்ல. இதனால்தான் இந்தியத் தலைவர்கள் கூட ஒற்றுமையை வலியுறுத்தும் நிலைமை நீடித்து வருகின்றது. எனவே இனியாவது இந்த விடயத்தில் தமிழ்த் தேசியத் தலைமைகள் சிந்திக்க வேண்டும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதிக்கான கம்பன் விருதும் தமிழ் மக்களின்...

2026-05-10 15:14:37
news-image

இந்திய துணை ஜனாதிபதியின் ஒற்றுமைக்கான அழைப்பு

2026-04-26 10:45:41
news-image

தற்போதைய மோசடி தொடர்பில் உடனடி விசாரணையே...

2026-04-19 12:15:35
news-image

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளை நிலைநிறுத்துங்கள்

2026-04-11 18:26:09
news-image

தமிழ்த் தேசியக் கட்­சி­க­ளுக்­கி­டையில் பொது இணக்­கப்­பாடு...

2026-04-05 10:38:09
news-image

மத்திய கிழக்கு மோதல் விவகாரத்தில் நடுநிலைமை...

2026-03-29 11:34:39
news-image

எரி­சக்தி நெருக்­க­டிக்கு தீர்வு காண்­ப­தற்கு தேசிய...

2026-03-22 15:06:40
news-image

உலகளாவிய நெருக்கடியை சந்திக்க தயாராக வேண்டும்

2026-03-15 13:55:18
news-image

தமிழ்த் தேசியக் கட்சிகளிடையே ஏற்பட்டுள்ள இணக்கம்...

2026-03-08 12:09:56
news-image

புதிய அர­சி­ய­ல­மைப்பு விவ­கா­ரத்தில் அக்­க­றை­யற்­றி­ருக்கும் அர­சாங்கம்

2026-03-01 12:37:43
news-image

இன ஒற்றுமைக்கான செயற்பாட்டுடன் தமிழர் பிரச்சினைக்கு...

2026-02-23 11:17:39
news-image

தமிழ் மக்­களின் உணர்­வு­களை புரிந்­து­கொள்­வது அவ­சியம்

2026-02-15 16:24:39