இன்றைய சூழலில் எம்முடைய பெண்மணிகளில் பலருக்கும் வைத்திய சிகிச்சைகளுக்கு கட்டுப்படாத வகையில் நாள்பட்ட வயிற்று வலி அல்லது இடுப்பு பகுதி வலி உண்டாகும்.
இதற்கு அடிசியோலிசிஸ் எனும் பாதிப்பின் அறிகுறியா..? என்பதை அருகில் உள்ள வைத்தியசாலைக்குச் சென்று, வைத்தியர்கள் பரிந்துரைக்கும் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.
அதனைத் தொடர்ந்து அதற்குரிய நவீன சத்திர சிகிச்சையையும் செய்து முழுமையான நிவாரணம் பெற வேண்டும் என வைத்தியர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
நாட்பட்ட வயிற்று வலி, தாங்க இயலாத வயிற்று வலி, இடுப்பு வலி, குடல் அடைப்பு காரணமாக ஏற்படும் வாந்தி, மலச்சிக்கல்... ஆகிய அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு அடிசிலியோசிஸ் எனும் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது என அவதானிக்கலாம்.
எம்முடைய வயிற்றின் உள்பகுதியில் உள்ள திசுக்களும், உடல் உறுப்புகளும் வழக்கத்திற்கு மாறாக ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொள்ளும் போது உருவாகும் இழைத்திசு பட்டைகளே அடிசிலியோசிஸ் என மருத்துவ மொழியில் குறிப்பிடப்படுகிறது.
இத்தகைய பாதிப்பு பெரும்பாலும் வயிறு அல்லது இடுப்பு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சத்திர சிகிச்சையின் காரணமாகவும், அங்கு ஏற்படும் தொற்று பாதிப்பு அல்லது அழற்சியின் காரணமாகவும் உண்டாகின்றன. சில பெண்களுக்கு குடல், கருப்பை , சினைப்பை , வயிற்றுப் பகுதியில் உள்ள இணைப்பு திசுக்கள்... ஆகியவை இதனால் பாதிக்கப்படும்.
சிலருக்கு இத்தகைய பாதிப்பு ஏற்படும்போது உடனடியாக அருகில் உள்ள வைத்தியசாலைக்குச் சென்று வைத்தியர்களை சந்தித்து ஆலோசனையும் சிகிச்சையும் பெற வேண்டும். அதனை புறக்கணித்தாலோ அல்லது அலட்சியப்படுத்தினாலோ இதன் காரணமாகவும் மலட்டுத்தன்மை ஏற்படக்கூடும் என வைத்தியர்கள் எச்சரிக்கிறார்கள்.
இத்தகைய பாதிப்பை துல்லியமாக அவதானிக்க நவீன ஸ்கேன் பரிசோதனைகள் மற்றும் குருதி பரிசோதனை மேற்கொள்ளப்படுகின்றன. இதனைத் தொடர்ந்து லேப்ராஸ்கோபிக் மூலமாகவோ அல்லது நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ரொபோக்கள் மூலமாகவோ சத்திர சிகிச்சை மேற்கொண்டு இதற்கு முழுமையான நிவாரணம் அளிக்கப்படுகிறது.
வைத்தியர் மஞ்சுளா தொகுப்பு அனுஷா.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM