(இணையத்தள செய்திப்பிரிவு)
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தற்கொலைத் தாக்குதல்கள் இடம்பெற்று ஏழு வருட நிறைவடைந்துள்ள நிலையில், நீதியை நிலைநாட்டும் விடயத்தில் அரசாங்கம் அசமந்தப்போக்குடன் செயற்பட்டால், சர்வதேச விசாரணையை கோருவதே சரியான வழி என கொழும்பு மறைமாவட்ட பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தற்கொலைத் தாக்குதல்கள் இடம்பெற்று ஏழு வருட நிறைவை முன்னிட்டு கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலத்தில் இடம்பெற்ற விசேட நினைவேந்தல் மற்றும் ஆராதனை நிகழ்வில் கொழும்பு மறைமாவட்ட பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை கலந்துகொண்டார்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய அவர் ஏழு ஆண்டுகள் கடந்தும், இந்த கொடூர தாக்குதலுக்குப் பின்னால் இருந்த உண்மையான சூத்திரதாரிகள் இன்னும் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை என கவலை வெளியிட்டார்.
கடந்த காலங்களில் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் நீதியை நிலைநாட்டும் வாக்குறுதிகளை வழங்கிய போதிலும், அவை அரசியல் தேவைகளுக்காக விசாரணைகளை திசைதிருப்பியதாக இதன்போது அவர் குற்றம் சுமத்தினார்.
அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்,
தாக்குதல் தொடர்பான முன்கூட்டிய எச்சரிக்கைகளை கவனிக்கத் தவறிய அதிகாரிகள் மற்றும் அதனை மூடிமறைத்தவர்கள் மீதான சட்ட நடவடிக்கை இன்னும் மந்தகதியிலேயே உள்ளது.
தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வரும்போது வழங்கிய வாக்குறுதிகளுக்கு அமைய விசாரணைகளை முன்னெடுத்தாலும், அவை இன்னும் கீழ்மட்டத்திலேயே இருக்கின்றன. தாக்குதலில் முன்னோடியாக செயற்பட்டவர்களைக் கண்டறிய இன்னும் தீவிர நடவடிக்கைகள் தேவை.
ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கைகளில் இன்னும் பகிரங்கப்படுத்தப்படாத பகுதிகள் மற்றும் இரகசிய ஆவணங்கள் குறித்து அரசாங்கம் வெளிப்படைத்தன்மையுடன் செயற்பட வேண்டும்.
விசாரணைகளுக்கு இடையூறாக இருக்கும் அல்லது கடந்த காலங்களில் தகவல்களை மறைத்த பாதுகாப்பு மற்றும் புலனாய்வுத் துறை அதிகாரிகள் இன்னும் உயர் பதவிகளில் நீடிப்பது விசாரணைகளின் சுயாதீனத்தன்மையை கேள்விக்குறியாக்குகிறது.
நீதியை நிலைநாட்டும் விடயத்தில் அரசாங்கம் அசமந்தப்போக்குடன் செயற்பட்டால், சர்வதேச விசாரணையை கோருவதே சரியான வழி என அவர் குறிப்பிட்டார்.
மேலும், இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்திக்காகவும், காயமடைந்தவர்களுக்கும் திருச்சபை என்றும் துணை நிற்கும் என அவர் இதன்போது உறுதியளித்தார்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM