சிங்கள பௌத்த ஆதிக்கத்தின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை

Published By: Robert

14 Sep, 2017 | 10:35 AM
image

தமி­ழர்­களின் அர­சியல் உரிமை தொடர்பில் சிங்­கள பௌத்த ஆதிக்­கத்தின் நிலைப்­பாட்டில் மாற்­றங்கள் இல்லை. கொடுப்­பதை வாங்­கிக்­கொண்டு இருக்க வேண்டும் என்றே அவர்கள் இன்னும் கரு­து­கின்­றனர். எனவே நிலை­யான மாற்­றத்­திற்­காக கடி­ன­மாக முயற்­சிக்க வேண்டும் என வட மாகாண முத­ல­மைச்சர் சி.வி. விக்­னே­ஸ்வரன் தெரி­வித்தார்.

Image result for சி.வி. விக்­னே­ஸ்வரன் virakesari

மல்­வத்து மற்றும் அஸ்­கி­ரிய பீடங்­களின் மகா­நா­யக்­கர்­க­ளு­ட­னான சந்­திப்பு தொடர்பில் நேற்று புதன்கிழமை தெளிவு­ப­டுத்­து­கை­யி­லேயே வட மாகாண முத­ல­மைச்சர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். 

அவர் தொடர்ந்தும் கூறு­கையில்,

மல்­வத்து மற்றும் அஸ்­கி­ரிய பீடங்­களின் மகா­நா­யக்க தேரர்­களை சந்­தித்து கலந்­து­ரை­யா­டு­வ­தற்­கான வாய்ப்பு கிடைத்தது. நீண்ட நாட்­க­ளாக சந்­திக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்­பிற்கு அமை­வாக சிறந்த சந்­திப்பை என்னால் முன்­னெ­டுக்க முடிந்­தது. 

அஸ்­கி­ரிய மகா­நா­யக்­க­ரு­டனான சந்­திப்­பா­னது தனிப்­பட்­ட­தாக அமை­ய­வில்லை. மாறாக உத்­தி­யோ­க­பூர்­வ­மா­ன­தாக அஸ்­கி­ரிய பீடத்தின் முக்­கிய மகா­நா­யக்க தேரர்கள் சந்­திப்பில் கலந்து கொண்­டனர். 

எவ்­வா­றா­யினும் தமிழ் மக்­களின் எதிர்­பார்ப்­புகள் மற்றும் நிலைப்­பா­டு­களை மல்­வத்து மற்றும் அஸ்­கி­ரிய பீடங்­க­ளுக்கு அறிய கொடுத்தோம். சமஷ்டி என்ற சொல் தொடர்பில் முன்­கூட்­டியே தீர்மானம் ஒன்றில் உள்­ளனர். இலங்­கைக்கு எதி­ரா­னது, பிரி­வி­னை­வாதம் மற்றும் நாட்டை துண்­டாடி விடும் என்­கின்­றது போன்று அவர்கள் சமஷ்டி தொடர்பில் நிலை­யான தீர்­மா­னத்தை வைத்­துள்­ளனர். 

இத­னூ­டாக சிங்­கள பௌத்த ஆதிக்­கத்தின் நிலைப்­பாடு வெளிப்­பட்­டுள்­ளது. இந்த நிலைப்­பாட்டை மாற்­று­வ­து கடி­ன­மா­னது என்­றாலும் இய­லு­மா­ன­தொன்­றா­கவே உள்­ளது. அர­சியல் தீர்வு என்ற விட­யத்­திற்கு செல்லும் போது ஒற்­றை­யாட்சி என்று கூறு­கின்­றனர். அதில் தமிழ் மக்­களின் தீர்வு விடயம் எவ்­வாறு உள்­ளது என்­பது குறித்து பேசு­வ­தாக இல்லை. 

கொடுப்­பதை வாங்­கிக்­கொண்டு தமி­ழர்கள் இருக்க வேண்டும் என்கின்ற நிலைப்பாடே காணப்படுகின்றது. எனவே இன்னும் கடினமாக உழைக்க வேண்டியுள்ளது. ஏனைய தரப்புகளையும் சந்தித்து பேசலாம் என்று நினைத்துள்ளேன் என தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38