(இணையத்தள சர்வதேச செய்திப் பிரிவு)
ஜப்பானில் கடலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தையடுத்து, முதல் சுனாமி அலை நாட்டின் கடற்கரையை எட்டியுள்ளது என ஜப்பான் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
அந்த முதல் அலை சுமார் 40 செ.மீ. உயரம் கொண்டதாக பதிவாகியுள்ளதாகவும், அது பாதுகாப்பு கண்காணிப்பு அமைப்புகளால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுனாமி எச்சரிக்கை தொடர்ந்து அமுலில் உள்ள நிலையில், கடற்கரை பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான உயரமான பகுதிகளுக்கு இடம்பெயருமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும் அடுத்தடுத்த அலைகள் அதிக உயரத்துடன் இருக்கக்கூடும் என்பதால், பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமெனவும், உத்தியோகபூர்வ அறிவுறுத்தல்களை மட்டும் பின்பற்றுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
நிலையமைப்பு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM