மே தினக் கூட்டம்: சஜித்திடமிருந்து அழைப்பு வரவில்லை - நவீன் திஸாநாயக்க அதிரடி!

20 Apr, 2026 | 04:09 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

மேதின கூட்டத்தை இணைந்து நடத்த ஐக்கிய மக்கள் சக்தியிடமிருந்து இதுவரை உத்தியோகபூர்வமான அழைப்பு கிடைக்கவில்லை என ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.

புதுவருடத்தை முன்னிட்டு இன்று திங்கட்கிழமை (20) ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் பணிகளை ஆரம்பிக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே  இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,

மேதின நிகழ்வை இணைந்து மேற்கொள்ள ஐக்கிய மக்கள் சக்தியிடமிருந்து இதுவரை உத்தியோகபூர்வமாக அழைப்பு கிடைக்கவில்லை.  என்றாலும் 

சர்வதேச தொழிலாளர் தினம் எதிர்வரும் முதலாம் திகதி வெசாக் போயா தினத்தில் வருவதால், அன்றைய தினம் அரசியல் ரீதியிலான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் எமது தேசிய சேவை சங்கத்துடன் இணைந்து மத வழிபாட்டை அடிப்படையாகக்கொண்டு மேதின நிகழ்வுகளை மேற்கொள்ள திட்டமிட்டிருக்கிறோம். 

ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி இணைந்து மேதின கூட்டத்தை நடத்துவதில் எந்த பிரச்சினையும் இல்லை. என்றாலும் அன்று வெசாக் தினமும்  இருப்பதால்தான் பிரச்சினை இருக்கிறது. இரண்டு கட்சிகளும் இணைந்து செயற்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலே நான் இருக்கிறேன். என்றாலும் எமது தனித்துவத்தையும் நாங்கள் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். அதேநேரம் எப்படியாவது இரண்டு கட்சிகளையும் இணைத்துக்கொண்டு செல்ல நானும் எமது ஏனைய தலைவர்களும் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.

அதேநேரம் மக்கள் இந்தமுறை தமிழ் சிங்கள புத்தாண்டை மிகவும் சிரமத்துக்கு மத்தியிலேயே  கொண்டாடியுள்ளார்கள். பொருட்களின் விலை அதிகரிப்பே அதற்கு காரணமாகும் நிலக்கரி மோசடி காரணமாகவே  எரிபொருட்களின் விலை அதிகரிப்பதற்கு காரணமாகும்.

என்றாலும் தற்போது இந்த மோசடி குறித்து தேடிப்பார்க்க ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமிக்கப்பட்டிருக்கிறது. இந்த விசாரணைக்குழு நீதியான விசாரணை மேற்கொள்ளும் என நாங்கள் நம்புகிறோம் என்றார்.

இதேவேளை, ஐக்கிய தேசிய கட்சி தலைமையகத்தில் இடம்பெற்ற புதுவருட பணி ஆரம்பிக்கும் இந்த நிகழ்வில் சுகாதார நிலைமையை கருத்திற்கொண்டு கட்சியின் தலைவரான ரணில் விக்ரமசிங்க கலந்துகொள்ளவில்லை. கட்சியின் பொதுச் செயலாளரான தலதா அத்துகோரளவின் தலைமையிலேயே நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தற்போதைய அரசுக்கு முட்டுக்கட்டை போடாது நாட்டை...

2026-05-11 17:45:11
news-image

"இலங்கை மற்றும் பாகிஸ்தான் இடையிலான இளைஞர்...

2026-05-11 19:16:34
news-image

அமரகீர்த்தி அத்துகோரல கொலை வழக்கு :...

2026-05-11 18:59:17
news-image

21வது ஆசிய ஊடக மாநாட்டில் பங்கேற்பதற்காக...

2026-05-11 18:05:33
news-image

கண்டி விக்டோரியா நீர்த்தேக்கத்தில் நீர்மட்டம் குறைவு

2026-05-11 17:42:16
news-image

கொழும்பு டேம் வீதி பொலிஸ் நிலையத்துக்கு...

2026-05-11 17:56:52
news-image

நாட்டின் நிதிப் பரிமாற்றம், தரவுகளின் பாதுகாப்பை...

2026-05-11 17:37:22
news-image

கடும் மழையால் பண்டாரவளை நகரம் வெள்ளத்தில்...

2026-05-11 16:47:11
news-image

யாழில் முள்ளிவாய்க்கால் நினைவு வாரம்

2026-05-11 16:34:04
news-image

தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதியிலுள்ள வீதியை...

2026-05-11 16:25:45
news-image

உருமாற்றம் செய்யப்பட்ட வாகனங்களுக்குத் தடை: பொலிஸார்...

2026-05-11 16:19:16
news-image

விசாரணைக்கு அழைக்கும் எந்த நேரத்திலும் சமூகமளிக்கத்...

2026-05-11 16:01:35