(இணையத்தள மட்டக்களப்பு செய்தியாளர்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்தின் கீழுள்ள செட்டிப்பாளையம் மகா வித்தியாலயத்தில் 2017ஆம் ஆண்டு கல்விப் பொது தராதர சாதாரண தரத்தில் கற்ற மாணவர்களின் அனுசரணையில் அமைக்கப்பட்ட 12 அடி உயரம் கொண்ட சரஸ்வதி சிலை திங்கட்கிழமை (20) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
வித்தியாலய பிரதி அதிபர் சு.ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பட்டிருப்பு வலயக் கல்வி பணிப்பாளர் சிவானந்தம் சிறிதரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டிருந்தார்.
இதன்போது காரைதீவு பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் பிரணவரூபன் மற்றும் முன்னாள் அதிபர் அருள்ராசா, பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் பாடசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட 12 அடி உயரமுடைய சரஸ்வதி சிலைக்கு பூர்வாங்க கிரியைகள் நடைபெற்றுத, அதிதிகளால் திரை நீக்கம் செய்யப்பட்டு, சிலை திறந்துவைக்கப்பட்டது.




















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM