(இணையத்தள செய்தி பிரிவு)
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க, குருணாகல் - பிலெஸ்ஸ நீதவான் நீதிமன்றத்தினால் திங்கட்கிழமை (20) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
வாகனப் பதிவுகளில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பான விசாரணையின் கீழ், கடந்த மார்ச் 27 ஆம் திகதி அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டார்.
ஒரு கெப் ரக வாகனத்தின் சேஸிஸ் இலக்கத்தை மாற்றி, அதனை மோசடியான முறையில் பதிவு செய்வதற்கு உறுதுணையாக இருந்தமை மற்றும் தூண்டியமை ஆகிய குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க, திங்கட்கிழமை முற்பகல் பிலெஸ்ஸ நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தப்பட்டதுடன், இந்த வழக்கு பிலெஸ்ஸ நீதிவான் டப்ளியூ.எம்.எம்.ஐ. வாசல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
சந்தேக நபர் 25 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணை மற்றும் தலா 2 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டார்.
சந்தேக நபர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் நீதிமன்றில் முன்வைத்த தகவல்களின்படி, கமல் அமரசிங்க குறித்த வாகனத்தைப் பதிவு செய்வதற்காக அதன் செஸி இலக்கத்தை மாற்றியமைப்பதற்கான ஆவணங்களைச் சமர்ப்பித்து 'வாகன எடைச் சான்றிதழைப்' பெற்றுக்கொண்டுள்ளார்.
அதன் பின்னர், அந்த ஆவணங்களைப் பயன்படுத்தி குறித்த வாகனத்திற்கு 'ஈ' தரத்திலான இலக்கத்தைப் பெற்றுக்கொண்டதோடு, செஸி இலக்கத் திருத்தத்திற்காகச் சமர்ப்பிக்கப்பட்டிருந்த கோப்பினை மறைத்து வைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இவ்விடயம் தொடர்பில் பொய்யான வாக்குமூலங்களை வழங்கி, மோசடியான முறையில் வாகனத்தைப் பதிவு செய்ய உதவி ஒத்தாசை வழங்கியமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த மோசடி தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவும் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ள து. இந்நிலையில் திங்கட்கிழமை சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, மன்றில் முன்வைக்கப்பட்ட இருதரப்பு சாட்சிகங்களையும் கருத்திற்கொண்டு, அதற்கமைய, சந்தேக நபருக்கு 25 ஆயிரம் ரூபா ரொக்கப்பிணை மற்றும் தலா 2 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகள் விதிக்கப்பட்டு பிணை வழங்கப்பட்டதுடன், அவரது வெளிநாட்டுப் பயணங்களுக்கும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM