இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: மூவர் காயம்!

Published By: Digital Desk 1

20 Apr, 2026 | 11:36 AM
image

(இணையத்தள செய்திப் பிரிவு)

நெலுவ – மொரவக்க வீதியின் லேல்வல, குருதியபத சந்தியில் இன்று திங்கட்கிழமை (20) காலை இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதுடன், வீதியின் வலதுபுறமாக மோட்டார் சைக்கிள்கள் செலுத்தப்பட்டமையே இந்த விபத்துக்குக் காரணம் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அக்குரஸ்ஸ, போரம்ப பகுதியைச் சேர்ந்த ஒருவரும், நெலுவ பகுதியிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் பணிபுரியும் இரு இளைஞர்களும் இந்த விபத்தில் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் நெலுவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக உடுகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். 

சம்பவம் தொடர்பில் நெலுவ பொலிஸ் போக்குவரத்துப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தற்போதைய அரசுக்கு முட்டுக்கட்டை போடாது நாட்டை...

2026-05-11 17:45:11
news-image

"இலங்கை மற்றும் பாகிஸ்தான் இடையிலான இளைஞர்...

2026-05-11 19:16:34
news-image

அமரகீர்த்தி அத்துகோரல கொலை வழக்கு :...

2026-05-11 18:59:17
news-image

21வது ஆசிய ஊடக மாநாட்டில் பங்கேற்பதற்காக...

2026-05-11 18:05:33
news-image

கண்டி விக்டோரியா நீர்த்தேக்கத்தில் நீர்மட்டம் குறைவு

2026-05-11 17:42:16
news-image

கொழும்பு டேம் வீதி பொலிஸ் நிலையத்துக்கு...

2026-05-11 17:56:52
news-image

நாட்டின் நிதிப் பரிமாற்றம், தரவுகளின் பாதுகாப்பை...

2026-05-11 17:37:22
news-image

கடும் மழையால் பண்டாரவளை நகரம் வெள்ளத்தில்...

2026-05-11 16:47:11
news-image

யாழில் முள்ளிவாய்க்கால் நினைவு வாரம்

2026-05-11 16:34:04
news-image

தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதியிலுள்ள வீதியை...

2026-05-11 16:25:45
news-image

உருமாற்றம் செய்யப்பட்ட வாகனங்களுக்குத் தடை: பொலிஸார்...

2026-05-11 16:19:16
news-image

விசாரணைக்கு அழைக்கும் எந்த நேரத்திலும் சமூகமளிக்கத்...

2026-05-11 16:01:35