அநுராதபுரத்தில் பொல்லால் தாக்கி ஒருவர் கொலை: 06 பேர் கைது

Published By: Digital Desk 3

20 Apr, 2026 | 09:46 AM
image

அநுராதபுரம் – கவரக்குளம் பகுதியில் கடந்த 17ஆம் திகதி மாலை பொல்லால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கவரக்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

கவரக்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹல்மில்லவெவ பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில், ஹல்மில்லவெவ – குருந்தங்குளம் பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய ஓய்வு பெற்ற இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இரு தரப்பினருக்கிடையில் நீண்டகாலமாக நிலவி வந்த பகைமை காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றிருக்கலாம் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்தக் கொலைச்சம்பவத்துடன் தொடர்புடைய அதே பகுதியைச் சேர்ந்த 6 சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் பரிசோதகர் திசாநாயக்க தலைமையில் கவரக்குளம் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு மேற்கொண்டு வருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

"இலங்கை மற்றும் பாகிஸ்தான் இடையிலான இளைஞர்...

2026-05-11 19:16:34
news-image

அமரகீர்த்தி அத்துகோரல கொலை வழக்கு :...

2026-05-11 18:59:17
news-image

21வது ஆசிய ஊடக மாநாட்டில் பங்கேற்பதற்காக...

2026-05-11 18:05:33
news-image

கண்டி விக்டோரியா நீர்த்தேக்கத்தில் நீர்மட்டம் குறைவு

2026-05-11 17:42:16
news-image

கொழும்பு டேம் வீதி பொலிஸ் நிலையத்துக்கு...

2026-05-11 17:56:52
news-image

நாட்டின் நிதிப் பரிமாற்றம், தரவுகளின் பாதுகாப்பை...

2026-05-11 17:37:22
news-image

கடும் மழையால் பண்டாரவளை நகரம் வெள்ளத்தில்...

2026-05-11 16:47:11
news-image

யாழில் முள்ளிவாய்க்கால் நினைவு வாரம்

2026-05-11 16:34:04
news-image

தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதியிலுள்ள வீதியை...

2026-05-11 16:25:45
news-image

உருமாற்றம் செய்யப்பட்ட வாகனங்களுக்குத் தடை: பொலிஸார்...

2026-05-11 16:19:16
news-image

விசாரணைக்கு அழைக்கும் எந்த நேரத்திலும் சமூகமளிக்கத்...

2026-05-11 16:01:35
news-image

வாடகை வீடுகள் மூலம் நிதி மோசடிகள்:...

2026-05-11 16:18:22