( இணையத்தள செய்திப் பிரிவு )
மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, பெருமளவிலான போதைப்பொருட்களுடன் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவில் தடுப்புக்காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட சந்தேகநபர் ஒருவரிடம் பெறப்பட்ட தகவலுக்கமைய, ஞாயிற்றுக்கிழமை (19) காலை இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது சந்தேகநபர்களிடமிருந்து 02 கிலோகிராம் 400 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள், 112 கிராம் ஹெரோயின், 08 கிராம் கொக்கெய்ன் மற்றும் போதைப்பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தில் போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரும், அதற்கு உதவிய ஒருவருமாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள்; 31 மற்றும் 42 வயதுடையவர்கள் எனவும் பன்னிபிட்டிய மற்றும் ஹோமாகம பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM