புத்தாண்டு காலத்தில் விபத்துக்கள் மற்றும் நீரில் மூழ்கி 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு - பொலிஸார் தகவல்!

Published By: Digital Desk 1

20 Apr, 2026 | 08:13 AM
image

( இணையத்தள செய்திப் பிரிவு )

சித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்துக்கள் மற்றும் நீரில் மூழ்கிய சம்பவங்களினால் மாத்திரம் 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரையான காலப்பகுதியிலேயே இந்த உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. 

விபத்துக்களினால் மாத்திரம் 53 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் ஏப்ரல் 10 மற்றும் 13 ஆகிய திகதிகளிலேயே அதிகளவான உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன.

இதேவேளை, ஆறுகள், குளங்கள் மற்றும் கடலில் நீராடச் சென்ற 27 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு புத்தாண்டு காலப்பகுதியில் விபத்துக்கள் மற்றும் நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.                   

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மின்கட்டண உயர்வு: நிலக்கரி ஊழலை மறைக்கும்...

2026-05-09 23:49:27
news-image

அரசின் பொதுச் சேவை வழங்கல்களை வினைத்திறன்...

2026-05-09 20:58:51
news-image

கபில சந்திரசேனவின் பிரேத பரிசோதனை அறிக்கை...

2026-05-09 20:55:37
news-image

யாழ் போதனா வைத்தியசாலை மருந்துக் களஞ்சிய...

2026-05-09 20:56:13
news-image

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையை அரசாங்கம் திட்டமிட்டு...

2026-05-09 19:05:16
news-image

பெலவத்தை உத்தரவுக்கமையவே என்னிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது...

2026-05-09 18:40:18
news-image

மட்டக்களப்பு மேய்ச்சல் தரை விவகாரம் :...

2026-05-09 18:41:54
news-image

இளம் குடும்பஸ்தர் கடத்தித் தாக்கப்பட்டு 3...

2026-05-09 20:18:52
news-image

அரசியல் பழிவாங்கல்களுக்காக அரச பொறிமுறை கீழ்த்தரமான...

2026-05-09 17:05:37
news-image

ஹட்டன் வெலிஓயாவில் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்

2026-05-09 21:00:11
news-image

பிரதமருக்கும் வியட்நாம் ஜனாதிபதிக்கும் இடையில் இருதரப்பு...

2026-05-09 20:25:44
news-image

இலங்கை - வியட்நாம் இடையில் வர்த்தக,...

2026-05-09 21:02:23