(எம்.ஆர்.எம்.வசீம்)
சர்வதேச தொழிலாளர் தின மேதின கூட்டத்தை ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி இணைந்து கொழும்பில் நடத்துவதற்கு திட்டமிட்டிருக்கிறேம் என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் மேதின கூட்டம் தொடர்பில் ஞாயிற்றுக்கிழமை (19) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,
தொழிலார்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம், தற்போது அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தொழிலாளர்களை ஏமாற்றி இருக்கிறது. அதனால் எதிர்வரும் மே முதலாம் திகதி தொழிலாளர் தினத்தை அரசாங்கத்துக்கு எதிரான மே தின கூட்டத்தை நடத்துவதற்கு நாங்கள் திட்டமிட்டிருக்கிறோம்.
கொழும்பில் நடத்த இருக்கும் இந்த மே தின கூட்டத்துக்கு ஐக்கிய தேசிய கட்சிக்கும் நாங்கள் அழைப்பு விடுக்க இருக்கிறோம். இரண்டு கட்சிகளும் ஒன்றிணைந்து மே தின கூட்டத்தை நடத்துவதற்கே திட்டமிட்டிருக்கிறோம். அதனால் ஐக்கிய தேசிய கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்து நடத்தும் முதலாவது மே தின கூட்டம் எதிர்வரும் மே முதலாம் திகதி இடம்பெறும் என நம்புகிறேன்.
அத்துடன் பொதுஜன பெரமுன மே தினத்தை கொண்டாடுவதில்லை என தெரிவித்திருக்கிறது. மே தினத்தை கொண்டாட முடியாத அந்த கட்சி, ஒருபோதும் அடுத்த தேர்தலில் ஆட்சியமைக்கப்போவதில்லை. அதேநேரம் கடந்த பொதுத் தேர்தலில் மக்கள் பொதுஜன பெரமுனவை நிராகரித்து, பிரதான எதிர்க்கட்சியாக ஐக்கிய மக்கள் சக்தியை தெரிவு செய்திருக்கிறார்கள். அதனால் எடுத்த ஆட்சி அமைக்கப்போவது சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியாகும் என்றார்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM