(இணையத்தள சர்வதேச செய்தி பிரிவு)
ஈரான் மீதான போர் பதற்றங்கள் உலகளவில் அதிகரித்து வரும் நிலையில், வடகொரியா இன்று ஞாயிற்றுக்கிழமை மீண்டும் பல பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்தியுள்ளது. அமெரிக்கா மற்றும் தென்கொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் நிலவும் சூழலில், இந்த நடவடிக்கை சர்வதேச அரங்கில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
வடகொரியாவின் கிழக்குக் கடற்கரையில் உள்ள சின்போ நகருக்கு அருகில் இன்று காலை சுமார் 6.10 மணியளவில் ஏவப்பட்ட ஏவுகணைகள் சுமார் 140 கிலோமீட்டர் தூரம் பாய்ந்து கடலில் விழுந்தன.
இது இந்த மாதத்தில் வடகொரியா மேற்கொண்ட நான்காவது ஏவுகணை சோதனையாகவும், இந்த ஆண்டில் ஏழாவது முறையாகவும் பதிவாகியுள்ளது.
ஈரான் மீது நடைபெறும் அமெரிக்கா–இஸ்ரேல் தாக்குதல்கள் மற்றும் ஈரானின் அணுசக்தித் திட்டங்களை கட்டுப்படுத்தும் முயற்சிகளுக்கு மத்தியில், வடகொரியா தனது அணு மற்றும் பாதுகாப்புத் திறனை வெளிப்படுத்தும் நோக்கில் இந்த சோதனைகளை மேற்கொள்வதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.
“ஈரானைப் போல அல்லாமல், எங்களிடம் வலுவான தற்காப்புத் திறன் உள்ளது என்பதைக் காட்டவே இந்த ஏவுகணை சோதனை நடத்தப்பட்டிருக்கலாம்” என தென்கொரியாவின் முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் கிம் கி-ஜங் தெரிவித்துள்ளார்.
தென்கொரியாவின் ஜனாதிபதி மாளிகை அவசர பாதுகாப்பு கூட்டத்தை உடனடியாக கூட்டியுள்ளது. இந்த நடவடிக்கை ஐநா பாதுகாப்புச் சபை தீர்மானங்களை மீறுவதாகவும், “தூண்டிவிடும் செயல்” எனவும் தென்கொரியா கண்டித்துள்ளது.
அதேபோல், ஜப்பான் அரசு, ஏவுகணைகள் அதன் பிரத்யேக பொருளாதார மண்டலத்திற்குள் விழவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளதுடன், வடகொரியாவின் தொடர்ச்சியான நடவடிக்கைகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மேலும், வடகொரியா தனது அணு ஆயுதத் திறனை தீவிரமாக மேம்படுத்தி வருவதாகவும், புதிய யுரேனியம் செறிவூட்டல் நிலையம் இயங்கத் தொடங்கியிருக்கலாம் எனவும் சர்வதேச அணுசக்தி முகமை தலைவர் ரஃபேல் கிராஸி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM