ராகம பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றினுள் பெண் ஒருவரைத் தாக்கி, அவரது தலைமுடியை வெட்டி சித்திரவதை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் உட்பட ஐவர் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று சனிக்கிழமை (18) வெலிசர பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான ராகம பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய பெண் மற்றும் இராஜாங்கனை, கடவத்தை, ராகம மற்றும் திருகோணமலை சீனக்குடா பகுதிகளைச் சேர்ந்த 20, 21, 22 மற்றும் 23 வயதுடைய நான்கு இளைஞர்கள் உள்ளிட்ட ஐவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சமூக வலைதளங்களில் பரவிய காணொளி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகளை ஆரம்பித்த ராகம பொலிஸார், பாதிக்கப்பட்ட பெண்ணிடம் வாக்குமூலம் பெற்றுக்கொண்டனர்.
பின்னர் அவர் வைத்திய பரிசோதனைகளுக்காக ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM