(இணையத்தள சர்வதேச செய்திப் பிரிவு )
இஸ்ரேல் – லெபனான் இடையிலான பதற்றம் தொடர்பாக புதிய பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. டொனால்ட் டிரம்ப் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், இரு நாடுகளுக்குமிடையே 10 நாள் தற்காலிக போர்நிறுத்தம் அமுலுக்கு வந்ததாக தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து பதிலளித்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, “எனது நண்பர் டிரம்பின் வேண்டுகோளின் பேரில், லெபனானில் தற்காலிக போர்நிறுத்தத்திற்கு இஸ்ரேல் இணங்கியுள்ளது. ஆனால் ஹிஸ்புல்லாஹ் அமைப்புக்கு எதிரான நடவடிக்கைகள் இன்னும் நிறைவடையவில்லை,” என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், ஹிஸ்புல்லாவின் ஏவுகணை மற்றும் ரொக்கெட் கையிருப்புகளில் சுமார் 90 சதவீதத்தை இஸ்ரேல் அழித்துவிட்டதாகவும், இருப்பினும் அந்த அமைப்பை முழுமையாக செயலிழக்கச் செய்வதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்தும் நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டார்.
இந்த அறிக்கை வெளியாகும் முன்பாக, டொனால்ட் டிரம்ப் தனது சமூக ஊடக பதிவில், “இனி போதும்” என்று தெரிவித்து, லெபனான் மீது மேலதிக தாக்குதல்களை மேற்கொள்ள இஸ்ரேலுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், நெதன்யாகுவின் இந்த கருத்து, போர்நிறுத்தம் நிலைநிறுத்தப்படுமா என்ற கேள்வியை மீண்டும் எழுப்பியுள்ளது. மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் தொடர்ந்து அவதானிக்கப்பட வேண்டிய சூழ்நிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM