இந்த ஆண்டு தாய்லாந்தில் பாரம்பரிய புத்தாண்டு தினம் மற்றும் அதன் முக்கிய திருவிழாவான, ஒரு வார காலத்துக்கு கொண்டாடப்படும் 'சோங்க்ரான்' பண்டிகை நாட்களில் 951-க்கும் மேற்பட்ட விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அவற்றில் சிக்கி 191-க்கும் அதிகமானோர் பலியானதாகவும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அந்நாட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள இந்த ஒரு வார கால பண்டிகை நாட்களை அங்குள்ள மக்கள் “ஏழு ஆபத்தான நாட்கள்” என்கின்றனர்.
ஆபத்து நிறைந்த இப்பண்டிகை நாட்களில் ஏற்பட்ட விபத்துக்கள் தொடர்பாக அந்நாட்டில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையின்படி, சோங்க்ரான் கொண்டாடப்படும் இந்த ஒரு வார காலத்தில் 951-க்கும் அதிக வீதி விபத்துக்கள் ஏற்பட்டதாகவும் நூற்றுக்கணக்கான மக்கள் காயமடைந்ததாகவும் மற்றும் 191-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதில் 42 வீத விபத்துக்கள் வாகனங்களை வேகமாக ஓட்டியதால் இடம்பெற்றுள்ளன. 27.4 வீத விபத்துக்களுக்கு மது பாவனை ஒரு முக்கியமான காரணம் என கூறப்படுகிறது.
அதிகப்படியான விபத்துக்கள் நடைபெறும் காலப்பகுதியாக விளங்கினாலும், தாய்லாந்து பொருளாதாரத்துக்கு இந்த பண்டிகை சுமார் 940 மில்லியன் டொலர் வருமானத்தை ஈட்டித் தருவதாக கூறப்படுகிறது.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM