வங்கதேசத்தில் இருந்து மலேசியா நோக்கிச் சென்றுகொண்டிருந்த அகதிகள் படகு, இந்தியப் பெருங்கடலின் அந்தமான் கடல் பகுதியில் விபத்துக்குள்ளானது. இதில் பயணித்த சுமார் 250 பேர் மாயமாகியுள்ளனர்.
வங்கதேசத்தின் காக்ஸ் பஜார் பகுதியிலிருந்து ரோஹிங்கியா அகதிகள் மற்றும் வங்கதேசத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ஒரு விசைப்படகில் மலேசியா நோக்கிப் புறப்பட்டனர்.
படகில் அளவுக்கு அதிகமான மக்கள் இருந்ததாலும், கடலில் வீசிய பலத்த சூறாவளிக் காற்று மற்றும் சீற்றமான அலைகளாலும் படகு நிலைதடுமாறிக் கவிழ்ந்தது.
அப்போது அந்த வழியாக இந்தோனேசியா நோக்கிச் சென்றுகொண்டிருந்த சரக்குக் கப்பல் ஊழியர்கள், கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 9 பேரை மட்டும் உயிருடன் மீட்டுள்ளனர். மீதமுள்ள 250 பேரின் நிலை என்னவென்று தெரியவில்லை.
படகு கவிழ்ந்ததில் காணாமல்போனவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இருப்பினும் அவர்கள் உயிருடன் இருப்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவாகவே உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM