'ஹாட்ரிக் ஸ்டார் 'பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடித்து வெளியான 'லவ் இன்சூரன்ஸ் கம்பனி' திரைப்படம் - ரசிகர்களின் பேராதரவுடன் தொடர்ந்து பட மாளிகைகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால் மகிழ்ச்சி அடைந்த படக் குழு வெற்றிக்கு வித்திட்ட ரசிகர்களுக்கும் , ஊடகத்தினருக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.
இதற்காக சென்னையில் நடைபெற்ற நன்றி நவிலும் விழாவில் இயக்குநர் ஜெகன்- நடிகை கௌரி ஜி கிஷன் - நடிகை கிருத்தி ஷெட்டி , நடிகை தீபிகா வெங்கடாசலம் , நடிகர் எஸ் ஜே சூர்யா , பிரதீப் ரங்கநாதன், இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆகியோர் பங்கு பற்றினர்.
இந்நிகழ்வில் இயக்குநர் விக்னேஷ் சிவன் பேசுகையில், '' இந்தப் படத்தின் மூலம் நான் கற்பனை செய்த ஒரு உலகத்தை திரையில் கொண்டுவர முடிந்தது. அந்த கற்பனையை ரசிகர்கள் ரசித்து கைதட்டும் போது அதைவிட பெரிய சந்தோஷம் எனக்கு எதுவும் இல்லை.
எவ்வளவு கஷ்டப்பட்டு இருந்தாலும் இன்று மக்கள் இந்த படத்தை கொண்டாடுகிறார்கள் என்பதே எனக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. அதற்காக அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி'' என்றார்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM