பிரசவகால சிக்கலுக்குரிய நவீன சிகிச்சை

15 Apr, 2026 | 06:48 PM
image

திருமணத்திற்கு பிறகு பெண்கள் கருத்தரித்திருக்கும் போது பிரசவ தருணத்திற்காக தவிப்புடன் காத்திருப்பர் . இத்தகைய தருணங்களில் பல பெண்மணிகளுக்கு சிசேரியன் எனப்படும் சத்திர சிகிச்சை மூலமாக பிரசவம் நடைபெறும் . இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் அதில் ஒலிஹைட்ராம்னியோஸ் என மருத்துவ மொழியில் குறிப்பிடப்படும் பனிக்குட நீர் குறைபாடும் ஒரு காரணமாகும் என வைத்தியர்கள் விவரிக்கிறார்கள்.

ஒலிகோஹைட்ராம்னியோஸ் என்பது கருவுற்றிருக்கும் காலத்தில் தாயின் வயிற்றில் இருக்க வேண்டிய பனிக்குட நீரின் அளவு ...இயல்பான அளவைவிட மிக குறைவாக இருக்கும் ஒரு நிலையாகும். பொதுவாக பனிக்குட நீர் என்பது கர்ப்ப காலத்தில் கருவை சூழ்ந்திருக்கும் திரவ அமைப்பாகும். இது வயிற்றில் வளரும் கருவை நோய் தொற்று மற்றும் தொப்புள் கொடியின் அழுத்தத்தில் இருந்து பாதுகாப்பதுடன் அதன் அசைவுகளுக்கு இதமாகவும் இடமளிக்கிறது. மேலும் பனிக்குட நீர் என்பது கருவின் செரிமான மற்றும் சுவாச மண்டலங்களின் வளர்ச்சிக்கும் , அதன் உடல் வெப்பநிலையை சமநிலையில் வைத்திருப்பதற்கும் உதவுகிறது.

இந்த தருணத்தில் சில பெண்மணிகளுக்கு பிரசவ தருணங்களில் பனிக்குட நீர் இயல்பான அளவை விட குறைவாக இருந்தால்... கருவில் உள்ள சிசுவிற்கு உடல் நல பாதிப்புகள் ஏற்படக்கூடும். இது குழந்தை பிறந்த பிறகு அதன் வளர்ச்சியையும் பாதிக்கக்கூடும். மேலும் பிரசவத்தின் போது சிக்கலான சூழலையும் உண்டாக்கும்.

இத்தகைய குறைபாடு இருப்பது பெண்மணிகளுக்கு அதிக அளவில் தெரியாது. அவர்கள் கருவின் வளர்ச்சியை அளவிடுவதற்காக அல்ட்ரா சவுண்ட் பரிசோதனைகளை மேற்கொள்ளும்போது இவை கண்டறியப்படுகிறது. இத்தகைய பாதிப்பு பொதுவானது என்பதும் ,உலக அளவில் நான்கு சதவீத பெண்மணிகளுக்கு பனிக்குட நீர் குறைபாடு ஏற்படுகிறது என்றும் அதிலும் கருவுற்றிருக்கும் தருணங்களில் கடைசி மூன்று மாதங்களில் இத்தகைய பாதிப்பு அதிக அளவில் காணப்படுகிறது என்றும் வைத்தியர்கள் குறிப்பிடுகிறார்கள்.

பிறப்பு உறுப்பில் இருந்து திரவ கசிவு, கருப்பையின் அளவில் சமச்சீரற்ற நிலை, கருவின் அசைவுகளை உணர இயலாத நிலை.. ஆகியவையே இதற்றின் அறிகுறிகள் ஆகும்.‌

தாயிற்கும் சிசுவிற்கும் இணைப்பு பாலமாக இருக்கும் நஞ்சுக்கொடியில் உண்டாகும் சிக்கல்கள்-  உயர் குருதி அழுத்தம்- நீர்ச்சத்து குறைபாடு- என பல்வேறு காரணங்களால் இத்தகைய பாதிப்பு ஏற்படுகிறது. பெரும்பாலும் குறைமாத மாத பிறப்பாகவும், சிசேரியன் பிரசவமாகவும் நிகழும். மேலும் இத்தகைய குறைவான பனிக்குட நீரின் அளவு காரணமாக சிக்கல் ஏதுமற்ற நிலையில் வைத்தியர்கள் பிரத்யேக சத்திர சிகிச்சை மூலம் பிரசவங்கள் செய்து தாயையும், சேயையும் காப்பாற்றி வருகிறார்கள்..

வைத்தியர் ஸ்ரீ தேவி

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டோகோஃபோபியா எனும் திருமணமான பெண்களுக்கு ஏற்படும்...

2026-05-11 16:55:02
news-image

செப்டிக் என்செலோபதி எனும் மூளை பாதிப்பிற்குரிய...

2026-05-07 16:06:06
news-image

இதய இரத்த நாள அடைப்பு பாதிப்பிற்கான...

2026-05-06 18:44:07
news-image

தைரொய்ட் புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும்...

2026-05-05 17:56:46
news-image

டயாலிசிஸ் செய்து கொள்ளும் நோயாளிகளுக்கு பலனளிக்கும்...

2026-05-02 14:00:06
news-image

மாரடைப்பு ஏற்படுமா ? என்பதை துல்லியமாக...

2026-05-01 15:42:43
news-image

கீமோதெரபி சிகிச்சையால் பக்க விளைவுகள் ஏற்படுமா..?

2026-04-30 16:01:21
news-image

இலங்கையில் நால்வரில் ஒருவருக்கு இரைப்பை அழற்சி

2026-04-29 22:31:31
news-image

சர்க்கரை நோயாளிகள் கோடைகால வெப்பத்தை எதிர்கொள்வது...

2026-04-29 18:36:04
news-image

ஒன்றுக்கும் மேற்பட்ட இதய ரத்த நாள...

2026-04-27 16:03:52
news-image

மூளையில் ஏற்படும் காயங்களுக்கான நவீன சிகிச்சை

2026-04-25 13:06:07
news-image

அடிசியோலிசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன சத்திர...

2026-04-24 17:37:23