(நெவில் அன்தனி)
இங்கிலாந்தின் ஹெட்ஃபீல்ட் உள்ளக அரங்கில் நடைபெற்ற 108ஆவது அகில இங்கிலாந்து சிரேஷ்ட (மாஸ்டர்ஸ்) பட்மின்டன் போட்டிகளில் இலங்கையின் நடீஷா கயன்தி 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான ஒற்றையர் போட்டியில் தங்கப் பதக்கத்தையும் கலப்பு இரட்டையர் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்றெடுத்தார்.
கடந்த 10ஆம் திகதி நடைபெற்ற ஒற்றையர் இறுதிப் போட்டியில் இங்கிலாந்தின் ஜோ கோப்ஸ்டேக் என்வரை எதிர்த்தாடிய நடிஷா கயன்தி மிக இலகுவாக 2 நேர் செட்களில் வெற்றிபெற்று தங்கப் பதக்கத்துடன் சம்பியனானர்.
இப் போட்டியின் இரண்டு செட்களிலும் 21 - 11, 21 - 11 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் நடீஷா கயன்தி வெற்றிபெற்று தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.
இதனைத் தொடர்ந்து 12ஆம் திகதி நடைபெற்ற கலப்பு இரட்டையர் பிரிவில் நடீஷா கயன்திக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.
இங்கிலாந்து வீரர் ரொஹான் கப்பூருடன் ஜோடி சேர்ந்து கலப்பு இரட்டையர் பிரிவில் நடீஷா கயன்தி போட்டியிட்டார்.
இறுதிப் போட்டியில் இங்கிலாந்து ஜோடியினரான டேவிட் ரே, ஹெலன் ஃபிஷர் ஆகியோரிடம் ரொஹான் கப்பூர், நடீஷா கயன்தி ஜோடியினர் 14 - 21, 12 - 21 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றெடுத்தனர்.
பலப்பிட்டியவைப் பிறப்பிடமாகக் கொண்ட நடீஷா கயன்தி கடந்த வருடம் தாய்லாந்தின் பத்தாயாவில் நடைபெற்ற உலக சிரேஷ்ட பட்மின்டன் போட்டியில் 40 வயதுக்கு மேற்பட்ட கலப்பு இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார்.
இங்கிலாந்தில் பாடமின்டன் போட்டிகளில் பங்குபற்றி தங்கம், வெள்ளி ஆகிய இரண்டு பதக்கங்களை வென்றெடுத்த நடீஷா கயன்தி, இன்று புதன்கிழமை (15) காலை நாடு திரும்பினார்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM