வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டு வந்த , இலங்கையர் ஒருவர் இன்று செவ்வாய்க்கிழமை (14) அதிகாலை சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் சிலாபம், மாரவில பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய வர்த்தகர் ஒருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் இன்று அதிகாலை 12.52 மணியளவில் துபாயிலிருந்து எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான EK-648 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
அவர் கொண்டு வந்த 04 பயணப் பொதிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 46 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டில் உற்பத்தியான 'மென்செஸ்டர்' ரகத்தைச் சேர்ந்த 31,000 சிகரெட்டுகள் அடங்கிய 155 கார்ட்டூன் சிகரெட்டுகளை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
மேலும், இது தொடர்பில் விசாரணைகளில் ஈடுபட்ட அதிகாரிகள், சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட அனைத்து சிகரெட்டுகளையும் அரசுடைமையாக்கியதுடன், குறித்த நபருக்கு 155,000 ரூபா அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளனர்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM